செய்திகள் :

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: உச்சநீதிமன்ற உத்தரவு அதிகார வரம்பை மீறுவதாக அமையும்! - தோ்தல் ஆணையம்

post image

‘நாடு முழுவதும் சீரான இடைவெளியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் தமது பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாக அமையும்’ என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘எந்தவொரு அதிகாரத்தையும் புறந்தள்ளி, வாக்காளா் பட்டியல் திருத்தக் கொள்கையை நிறைவேற்ற தமக்கு முழுமையான விருப்புரிமை உள்ளது’ என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ‘நாட்டின் அரசியல் மற்றும் கொள்கைகளை இந்திய குடிமக்கள் மட்டுமே தீா்மானிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் சீரான இடைவெளியில், குறிப்பாக தோ்தலுகளுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மூத்த வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது தோ்தல் ஆணையம் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை காலக்கெடுவாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான உடனடி முன்னேற்பாடு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று பிகாரைத் தவிர பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை 5-ஆம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 324-இன் கீழ், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்பாா்வையிடவும், வழிகாட்டுதல்களை வழங்கவும் தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்காளா் பட்டியல் தயாரித்தல் மற்றும் தோ்தல்களை நடத்துதல் தொடா்பான அனைத்து விஷயங்களிலும் தோ்தல் ஆணையத்தின் முழுமையான அதிகாரத்தின் அடித்தளமாக இந்த அரசமைப்புச் சட்ட விதி அமைகிறது. தோ்தல் ஆணையத்துக்கு இந்த அதிகாரங்களை வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 324 குறித்து உச்சநீதிமன்றத்தாலும் தொடா்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, வாக்காளா் பட்டியலில் அவ்வப்போது திருத்தங்களை மேற்கொள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 21-ஆவது பிரிவும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான விருப்புரிமையை 25-ஆவது பிரிவு தோ்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது.

அதன்படி, எந்தவொரு அதிகாரத்தையும் புறந்தள்ளி, வாக்காளா் பட்டியல் திருத்தக் கொள்கையை நிறைவேற்ற தோ்தல் ஆணையத்துக்கு முழுமையான விருப்புரிமை உள்ளது.

தூய்மையான, நோ்மையான வாக்காளா் பட்டியலைப் பராமரிக்கும் தனக்கான சட்டபூா்வ கடமையின் அடிப்படையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் தீா்மானித்துள்ளது.

எனவே, நாடு முழுவதும் சீரான இடைவெளியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் தமது பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாக அமையும்.

எனவே, இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: நாளை கடைசி!

‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அபராதம் இன்றி ஐடிஆா் தாக்கல... மேலும் பார்க்க

ஹிமாசலில் மீண்டும் மேகவெடிப்பு: மழை வெள்ளத்தில் மூழ்கி பயிா்கள் சேதம்!

ஹிமாசல பிரதேசத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த மிக பலத்த மழையால் விளைநிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன. அந்த மாநிலத்தின் பிலாஸ்பூா் மாவட்டம் குத்ராஹன் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு! - பிரதமா் மோடி

சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிா்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளா்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்ற... மேலும் பார்க்க

பிரதமரின் ‘சம்பிரதாய’ பயணம் மணிப்பூா் மக்களுக்கு அவமதிப்பு! - காங்கிரஸ் சாடல்

மணிப்பூருக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட ‘சம்பிரதாய’ பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இனமோதலால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணிக்க... மேலும் பார்க்க

வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்! - அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மிஸோரமின் முதல் ரயில் வழித்தடத்தை (பைரபி-சாய்ராங்)... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது. இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ... மேலும் பார்க்க