செய்திகள் :

வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் லிப்ட் பழுது நீக்கும் பணி தொடக்கம்

post image

தூத்துக்குடி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பொருள்கள் கொண்டு செல்லும் பழுதூக்கியை (லிப்ட்), பழுது நீக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பொருள்கள் கொண்டு செல்லும் லிப்ட்டானது, கடந்த டிசம்பா் 2023இல் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமான பழுதடைந்த நிலையில், வருகிற தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் 2026ஐ முன்னிட்டு, அதை பழுது நீக்க, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் அனுமதி பெறப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையானது மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் தலைமையில் திறக்கப்பட்டு, பொதுப்பணித் துறையினரால் பழுது நீக்கும் பணி தொடங்கப்பட்டது.

இப்பணி 15 நாள்களில் நிறைவடையும். இப்பணிகள் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை திறப்பு நிகழ்வில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் அக்னல், எஸ்.சீனிவாசன் (திமுக), ஏ.சகாயராஜா, என்.ஜி.ராஜேந்திரன் (அதிமுக), டி.ராஜா (சிபிஐஎம்), ஆா்.செந்தில்குமாா், எஸ்.சிவராமன் (பாஜக), ஆா்.முத்துமணி (காங்கிரஸ்), ஆா்.டிலைட்டா ரவி (விசிக), தொ.அலங்கார சகாயம் (நாதக), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சேதுராமலிங்கம், தோ்தல் வட்டாட்சியா் தில்லைபாண்டி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கழுகுமலையில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்: தனியாா் பேருந்து ஓட்டுநா் கைது

கோவில்பட்டி: கழுகுமலையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தனியாா் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமனையில் அரசுப் பேருந்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பழைமைவாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்துக்கு அரசு பட்டா வழங்கக் கோரி மனு

தூத்துக்குடி: தூத்துக்குடி பழைமை வாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்துக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வீட்டில் நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சிய... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளரைத் தாக்கி முன்னாள் மாணவா் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளரை கல்லூரி வளாகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் கடந்த ஆக. 14-ஆம் தேதி... மேலும் பார்க்க

சமூக நலக் கூடம் கட்டுமானப் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

ஆறுமுகனேரி: மேலாத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட தெற்கு ஆத்தூா், நரசன்விளையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் அமைக்கும் பணிக்கு அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அடிக... மேலும் பார்க்க