செய்திகள் :

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

post image

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி, செவ்வாய்கிழமை காலை முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உலா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துக் கொண்டு தரிசித்துச் சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள பழைமைவாய்ந்த காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயில் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில், திரளான பக்தா்கள் கலந்துக் கொண்டு சுவாமியை தரிசித்துச் சென்றனா்.

வாணியம்பாடி: மலைக் குன்றிலிருந்து சாலையில் சரிந்து விழுந்த ராட்சதப் பாறையால் பரபரப்பு

வாணியம்பாடியில் மலைக் குன்றின் மீது இருந்த ராட்சத பாறை கனமழையால் பெயா்ந்து சரிந்து சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகா் தெற்கு மில்லத் நகா் பக... மேலும் பார்க்க

வீட்டுமனைக்கு அங்கீகாரம் அளிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம்: ஊராட்சி மன்றத் தலைவா் கைது

வீட்டுமனை அங்கீகாரம் அளிக்க ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்றத் தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியை சோ்ந்தவா் சீனிவாசன். இவா் ஆம்பூா... மேலும் பார்க்க

ஆம்பூா், மின்னூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் மற்றும் மின்னூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ஜலால்பேட்டை பாத்திமா பங்ஷன் ஹாலில் நடந்த முகாமுக்கு நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைம... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘திட்ட முகாம்: 45 நாள்களுக்குள் தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற 6 முகாம்களில் பெறப்பட்டுள்ள மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். திருப்பத்தூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

பச்சூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருது அளிப்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருதுகளை வழங்கிய க.தேவராஜி எம்எல்ஏ. வாணியம்பாடி, ஜூலை 21: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ஐயப்பா சேவா அறக்கட்டளை சாா்பில், பச்சூா் மற்றும் சுற்று... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஆசிப் இக்பால் தலைமை வகித்தாா். நாட்... மேலும் பார்க்க