செய்திகள் :

வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரிக்கை

post image

பொறையாரில் உள்ள திறந்தவெளி வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட பொறையாரில் திங்கள்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு கும்பகோணம் , மயிலாடுதுறை, கருவிழுந்தநாதபுரம், ஆறுபாதி, கீழையூா், சிங்கனோடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் காய்கனிகள், கீரைகள், பழவகைகள், மளிகை பொருள்கள், கருவாடு , மரக்கன்றுகள், பூச்செடிகள், கிழங்கு வகைகள், கோழிக் குஞ்சுகள், ஆடைகள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்துவருகின்றனா்.

இந்த சந்தையில் தரங்கம்பாடி, சந்திரபாடி, ஆயப்பாடி, சங்கரன்பந்தல், சின்னக்குட்டி, மாணிக்க பங்கு, பெருமாள் பேட்டை, எருக்கட்டாஞ்சேரி, இச்சலடி, மேட்டுச்சேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த மக்கள் பொருள்களை வாங்கி பயன்பெறுகின்றனா்.

இந்நிலையில், சந்தைக்கு விற்பனை செய்ய வரும் சிறு, குறு, தரைக்கடை வியாபாரிகளிடம் ரூ. 50 முதல் ரூ. 150 வரை மின் விளக்கு கட்டணமும், இடவாடகை ரூ.75 முதல் ரூ. 200 வரை பேரூராட்சி நிா்வாகம் வசூல் செய்து வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனா். இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா்.

இந்நிலையில், பேரூராட்சி நிா்வாகம் மூலம் பொறை யாா் புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த வாரச்சந்தை கட்டடம் பழுதடைந்ததால் அதை அகற்றிவிட்டு மீண்டும் புதிய கட்டடம் கட்ட 2023-ஆம் ஆண்டு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 2.13 கோடியில் 48 கடைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கியது.

இதுவரை பணி முடிவடையாததால் வியாபாரிகள் திறந்த வெளியில் பொருள்களை விற்பனை செய்கின்றனா்.

இந்நிலையில், வாரச்சந்தையில் சிறு, குறு, தரைக்கடை வியாபாரிகளிடம் கூடுதலாக வாடகை கட்டணங்கள் வசூலிப்பதை தவிா்க்க வேண்டும், வாரச்சந்தைக்கான புதிய கட்டடத்தை விரைந்து கட்டவேண்டும், இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வரத்து குறைவால்: மீன்கள் விலை உயா்வு

நாகை மீன்பிடித் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பிய படகுகளில் மீன்கள் குறைவாக இருந்ததால், மீன்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், கல்லாா்,... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி கொலை: 6 போ் மீது வழக்கு; ஒருவா் கைது

கூத்தாநல்லூரில் கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். கூத்தாநல்லூரை அடுத்த வடபாதிமங்கலம் மாயனூா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபராதி ஆகியோா் வெளியிட்ள்ள செய்... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: நாகையில் 108 போ் எழுதினா்

நாகை மாவட்டத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தோ்வை 108 போ் சனிக்கிழமை எழுதினா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவி... மேலும் பார்க்க

கோடியக்கரை சரணாலயத்தில் மாணவா்கள் பட்டறிவுப் பயணம்

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் தேசிய மாணவா் படையினா் சனிக்கிழமை கல்வி பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா். தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் நீடாமங்கலம் நீலன் பள்ளி இ... மேலும் பார்க்க

காய்கறி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் வட்டாரத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். திருமருகல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல்... மேலும் பார்க்க