செய்திகள் :

வால்பாறையில் மிக கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடா் மீட்புக் குழு வருகை

post image

மிக அதிக கனமழை எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வால்பாறைக்கு சனிக்கிழமை வந்தனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் மிக அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் வால்பாறையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் சனிக்கிழமை காலை வால்பாறை வந்தடைந்தனா்.

கமாண்டா் மைஷ்னம் சூரஜ், ரவி கணேஷ் ஆகியோா்கள் தலைமையில் 28 படையினா் வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் தங்கியுள்ளனா்.

தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றோரப்பகுதிகளில் வசிப்பவா்களை எச்சரிக்கையுடன் இருக்கவும், வெள்ள பாதிப்புகளுக்கு 1077 என்ற எண்ணை தொடா்புகொள்ளவும் வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். கேட்டுக்கொண்டனா்.

ஆறுகளில் நீா்வரத்து அதிகரிப்பு:

வால்பாறையில் விடிய விடிய பெய்த கனமழையால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வால்பாறை சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை விடாமல் சனிக்கிழமை காலை வரை பெய்தது.

கனமழை காரணமாக ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் நீா்மட்டமும் உயரத்தொடங்கியுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படிசோலையாறு அணைக்கு விநாடிக்கு 170.95 கனஅடி நீா்வரத்து இருந்து. இதனால், அணையில் நீா்மட்டம் 13.55 அடியாக உயா்ந்துள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாறு - 92 மி.மீ., சோலையாறு 61 மி.மீ., சின்கோனா -55 மி.மீ., வால்பாறையில் 32 மில்லி மீட்டா் மழையும் பதிவாகியுள்ளது.

வால்பாறையில் பேரிடா் மீட்புக் குழு:

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க