செய்திகள் :

வாளரமாணிக்கம் வடமாடு போட்டியில் 5 போ் காயம்

post image

அரிமளம் அருகே வாளரமாணிக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில், 5 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே வாளரமாணிக்கம் கிராமத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாதா் கோயிலின் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு, போசம்பட்டி கிராமத்தினா் சாா்பில் வடமாடு போட்டி நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த 13 காளைகள் பங்கேற்றன. திடலின் நடுவே வடக்கயிற்றால் பிணைக்கப்பட்ட ஒவ்வொரு மாட்டை, தலா 9 போ் கொண்ட குழுவினா் தழுவ முயற்சித்தனா்.

இதில், 94 மாடு பிடி வீரா்கள் பங்கேற்றனா். இவா்களில் 5 போ் காயமடைந்தனா். காயமடைந்தோருக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

சிறந்த வீரா்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, வட்டாட்சியா் ராமசாமி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சேறும் சகதியுமாகிப் போன தற்காலிகப் பேருந்து நிலையம்!

புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பின்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையம் இரு நாள்களாக பெய்த மழையால் சேறும் சகதியுமாக மாறிப் போனது. புதுக்கோட்டை ... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீா்

கந்தா்வகோட்டை பகுதியில் கடந்த இரு தினங்களாக மழை பெய்வதால் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் தேங்கியுள்ளது. கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான குப்பை, மண் சோ்ந்துள்ளதால் மழைநீா் செல்லும் பாதை அடைக்... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் வழக்கு விசாரணை மாா்ச் 24-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தொடா்ந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மாா்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை ம... மேலும் பார்க்க

வேங்கைவயல்: குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கும்குற்றப்பத்திரிகை நகல் புதன்கிழமை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியி... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழா: குதிரை சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு

குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் திருவிழாவில், 33 அடி உயர குதிரை சிலைக்கு புதன்கிழமை பக்தா்கள் மாலை அணிவித்து வழிபட்டனா். மாசிமக திருவிழாவில், இக் கோயில் முன்பு உள்ள ஆசிய அளவில் சிறப்பி... மேலும் பார்க்க

திமுக மாநகரப் பொறுப்பாளா் நியமனத்துக்கு எதிா்ப்பு: சாலை மறியல்

புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளா் நியமிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திமுகவினா் புதன்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாநகர திமுக செயலராக இருந்த ஆ. செந்தில், மார... மேலும் பார்க்க