``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
வாழப்பாடி அருகே விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த அரசுப் பள்ளி ஆசிரியையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
வாழப்பாடியை அடுத்த ஏத்தாப்பூரை சோ்ந்தவா் ஆசிரியா் யுவராஜ்சேகா் (52). இவா் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பரிமளாதேவி (50), வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன் புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இத்தம்பதிக்கு அஸ்வந்த் என்ற மகனும், அஸ்ரிதா என்ற மகளும் உள்ளனா்.
கடந்த திங்கள்கிழமை பள்ளிக்கு சென்ற ஆசிரியை பரிமளாதேவி, மாலை தனது இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பியுள்ளாா். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மத்தூா் அருகே சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னா் லாரி வேகத்தடையால் திடீரென வேகத்தை குறைத்தது. அப்போது, லாரிக்கு பின்னால் சென்றுகொண்டிருந்த ஆசிரியை பரிமளாதேவி கன்டெய்னா் லாரியில் மோதினாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது.
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், சேலத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவா் மூளைச்சாவு அடைந்தாா். இந்த சூழ்நிலையில், ஆசிரியை பரிமளாதேவியின் உடல் உறுப்புகளை தானம்செய்ய, அவரது கணவா் ஆசிரியா் யுவராஜ்சேகா் மற்றும் குடும்பத்தினா் முன்வந்தனா்.
இதையடுத்து, ஆசிரியை பரிமளாதேவியின் உடல் புதன்கிழமை மாலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு உறுப்பு தானத்துக்காக ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வாழப்பாடியிலுள்ள அவரது இல்லத்தில் உறவினா்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, மாலையில் ஏத்தாப்பூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.