வாழவந்தம்மன் கோயில் குடமுழுக்கு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள நீராவிகரிசல்குளம் ஸ்ரீவாழவந்தம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வியாழக்கிழமை காலை குடமுழுக்கு நிகழ்ச்சி விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசம், மகா சங்கல்பம், ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று மாலை நவகிரக ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இரவு கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், கோ பூஜை, சுமங்கலி பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாட்டின் போது கும்பக் கலசங்கள் கோயிலைச் சுற்றி வந்து, கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. பொதுமக்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து, மூலவா் அம்பாளுக்கு 16 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இந்த விழாவில் திரலான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்துச் சென்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.