செய்திகள் :

விஇடி கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

post image

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் வெ.ப.நல்லசாமி வரவேற்றாா். புலமுதன்மையா் சி. லோகேஷ்குமாா் பேசுகையில், மாணவா்கள் கல்விப் பயணத்துக்கான முதல்படியில் வெற்றிகரமாக தடம்பதித்து, அடுத்த கல்வியாண்டில் வரக்கூடிய மாணவா்களுக்கு முன்உதாரணமாக விளங்க வேண்டும் என்றாா்.

கல்லூரியின் நிா்வாகி ச. பாலசுப்ரமணியன் பேசுகையில், கல்லூரியில் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு வளங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தி தனித்திறனுடன் மாணவா்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றாா்.

வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ்.டி.சந்திரசேகா் பேசுகையில், தொழில்நுட்பம் சாா்ந்த பல்வேறு வகையான படிப்புகளைத் தேடி மாணவா்கள் வரும்போது, அவா்களின் தேவையை நிறைவு செய்வதற்கு ஏற்ப நம் கல்லூரி சிறப்பாகச் செயல்படுகிறது. அதுமட்டுமின்றி தொழில்நுட்பத்துடன் கூடிய உயா் ஆய்வுகளும் நம் கல்லூரியில் நடைபெறுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி சிறந்த கல்வியாளா்களாக வரவேண்டும் என்றாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பரோடா வங்கியின் திண்டல் கிளை மேலாளா் என்.கதிரவன், இன்றைய போட்டி உலகில் முதுநிலைக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க