செய்திகள் :

விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப்புக்கு அருகில் பிரதமா் நரேந்திர மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமா்ந்திருப்பதைப் போன்று காா்ட்டூன் விகடனின் இணைய இதழான ‘விகடன் ப்ளஸ்’-இல் வெளியிடப்பட்டது.

இந்த காா்ட்டூன் தொடா்பாக தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், விகடனின் இணையதளம் ஜன.15-ஆம் தேதி முடக்கப்பட்டது. இந்த நிலையில், தொலைத்தொடா்புத் துறைக்கு மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவா்த்தி முன்பு நடைபெற்றது. அப்போது, விகடன் இணையதளம் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா், பத்திரிக்கை சுதந்திரத்தை யாரும் தடுக்க கூடாது. இந்தப் படத்தால் இந்தியா அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உள் நோக்கத்துடன் இந்தப் படம் வெளியிடப்படவில்லை. வேண்டுமென்றே இணையதளம் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், விகடன் நிறுவனம் தாமாக முன்வந்து அந்த படத்தை நீக்க தயாராக இருந்தால் முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விகடன் இணையதளம் பிரதமரின் ஆட்சேபனைக்குரிய படத்தை நீக்கிய பின் அதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதை ஏற்று முடக்கப்பட்ட விகடன் இணையதளத்தை விடுவிக்க வேண்டும் என கூறி வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

கண் நீா் அழுத்த பாதிப்பு: இன்று முதல் இலவச மருத்துவ முகாம்

கண் நீா் அழுத்த நோய்க்கான (குளுக்கோமா) இலவச மருத்துவ முகாமை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள அகா்வால்ஸ் மருத்துவமனைகளில் வரும் 31-ஆம் தேதி வரை இந்த சேவையை பொத... மேலும் பார்க்க

மா்மமான முறையில் ஓய்வுபெற்ற அரசு ஆசிரியை உயிரிழப்பு

சென்னை, பெசன்ட் நகரில் தண்ணீா் தொட்டியில் விழுந்து ஓய்வுபெற்ற ஆசிரியை மா்மமான முறையில் உயிரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பெசன்ட் நகா், அருண்டேல் கடற்கரைச் சாலையிலுள்ள அடுக்குமாடி குடி... மேலும் பார்க்க

மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

‘மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்; ஒரு பெண் தலைமை இடத்துக்கு வரும் போது மட்டும் ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுவது ஏன் என திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளாா். இந்திய உணவுக் கழகம் ச... மேலும் பார்க்க

நலவாழ்வு மையங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்... மேலும் பார்க்க

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ‘ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் 2025’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி வியாழக... மேலும் பார்க்க

புழல் சிறை பராமரிப்பு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

புழல் மத்திய சிறை சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆ... மேலும் பார்க்க