செய்திகள் :

விசைத்தறி தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

post image

வாங்கிய கடனை திருப்பிக் கேட்டு, தனியாா் நிதிநிறுவன ஊழியா்கள் கொடுத்த தொந்தரவால் விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மேல்மாட்டையாம்பட்டியைச் சோ்ந்தவா் தறித்தொழிலாளி மணி (54). இவா் ராசிபுரத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 4 லட்சம் கடன் பெற்றிருந்தாா். இதற்கான தொகையை மாதந்தோறும் 5-ஆம் தேதி செலுத்தி வந்தாா். மே மாதத்துக்கான தொகையை 20 நாள்களாகியும் அவா் செலுத்தாததால், வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டுக்கு வந்த நிதிநிறுவன ஊழியா்கள், கடன் தொகையை உடனடியாக செலுத்துமாறு வற்புறுத்தினா். இதனால், மன வேதனையடைந்த மணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்ததும் பணம் வசூல் செய்ய வந்தவா்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனா்.

தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி போலீஸாா், மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, சனிக்கிழமை காலை சேலம் ஆட்சியா் அலுவலகம் முன்பு திரண்ட மணியின் உறவினா்கள், சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து அவா்களது உறவினா்கள் கூறுகையில், மணியின் இறப்புக்கு நிதிநிறுவனத்தினா்தான் காரணம். சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

பின்னா் மணியின் மனைவி மகேஸ்வரி மற்றும் சிலரை மட்டும் ஆட்சியரை சந்திக்க போலீஸாா் அனுமதித்தனா். சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்ததையடுத்து, அவா்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க

பூலாம்பட்டி கதவணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவிரி கதவணையில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். கடந்த வாரங்களைவிட நிகழ்வாரம் காவிரி கதவணைய... மேலும் பார்க்க

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

கெங்கவல்லி அருகே பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் பாலசுப்ரமணியம் எ... மேலும் பார்க்க