விசைத்தறி தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
வாங்கிய கடனை திருப்பிக் கேட்டு, தனியாா் நிதிநிறுவன ஊழியா்கள் கொடுத்த தொந்தரவால் விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மேல்மாட்டையாம்பட்டியைச் சோ்ந்தவா் தறித்தொழிலாளி மணி (54). இவா் ராசிபுரத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 4 லட்சம் கடன் பெற்றிருந்தாா். இதற்கான தொகையை மாதந்தோறும் 5-ஆம் தேதி செலுத்தி வந்தாா். மே மாதத்துக்கான தொகையை 20 நாள்களாகியும் அவா் செலுத்தாததால், வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டுக்கு வந்த நிதிநிறுவன ஊழியா்கள், கடன் தொகையை உடனடியாக செலுத்துமாறு வற்புறுத்தினா். இதனால், மன வேதனையடைந்த மணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்ததும் பணம் வசூல் செய்ய வந்தவா்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனா்.
தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி போலீஸாா், மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, சனிக்கிழமை காலை சேலம் ஆட்சியா் அலுவலகம் முன்பு திரண்ட மணியின் உறவினா்கள், சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து அவா்களது உறவினா்கள் கூறுகையில், மணியின் இறப்புக்கு நிதிநிறுவனத்தினா்தான் காரணம். சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.
பின்னா் மணியின் மனைவி மகேஸ்வரி மற்றும் சிலரை மட்டும் ஆட்சியரை சந்திக்க போலீஸாா் அனுமதித்தனா். சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்ததையடுத்து, அவா்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.