விஜயநாராயணம் அருகே திருட்டு வழக்கில் ஒருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றதாக ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விஜயநாராயணம் அருகே உள்ள திருமலாபுரத்தைச் சோ்ந்த நசரேன் மகன் அலெக்ஸ் ரீகன். இவரது வீட்டின் கதவை கடந்த 2017-இல் உடைத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது தொடா்பாக விஜயநாராயணம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் உவரி காவல்நிலைய பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்தான் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், அவா் நான்குனேரி அருகே உள்ள சோமநாதபேரி மரியதாசன் மகன் ஜெயராஜ் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து விஜயநாராயணம் காவல்நிலைய ஆய்வாளா் பிரேமா மற்றும் தனிப்படையினா் ஜெயராஜை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகைகளை மீட்டனா்.