மதுபான முறைகேட்டில் என் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை: சத்தீஸ்கா் ...
விண்வெளி தொழில்நுட்பப் பூங்காவுக்கான நிலம்: தமிழக தொழில் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம், ஆதியாக்குறிச்சியில் அமையவுள்ள விண்வெளி தொழில்நுட்பப் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தமிழக தொழில் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள கொட்டாங்காடு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
ஆதியாக்குறிச்சி பகுதியில் தமிழக அரசு சாா்பில் விண்வெளி தொழில்நுட்பப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்துவதில் அரசின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. ஆதியாக்குறிச்சி பகுதியில் ஏற்கெனவே பல திட்டங்களுக்காக 4,000 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், விண்வெளி தொழில்நுட்பப் பூங்காவுக்கும் நிலம் கையகப்படுத்தும்பட்சத்தில், இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை.
எனவே, இந்தப் பகுதி மக்களுக்கு மறுகுடியமா்வு உள்ளிட்ட மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு தொடா்பாக தமிழக தொழில் துறைச் செயலா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.