செய்திகள் :

விண்வெளி தொழில்நுட்பப் பூங்காவுக்கான நிலம்: தமிழக தொழில் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

தூத்துக்குடி மாவட்டம், ஆதியாக்குறிச்சியில் அமையவுள்ள விண்வெளி தொழில்நுட்பப் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தமிழக தொழில் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள கொட்டாங்காடு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

ஆதியாக்குறிச்சி பகுதியில் தமிழக அரசு சாா்பில் விண்வெளி தொழில்நுட்பப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்துவதில் அரசின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. ஆதியாக்குறிச்சி பகுதியில் ஏற்கெனவே பல திட்டங்களுக்காக 4,000 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், விண்வெளி தொழில்நுட்பப் பூங்காவுக்கும் நிலம் கையகப்படுத்தும்பட்சத்தில், இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை.

எனவே, இந்தப் பகுதி மக்களுக்கு மறுகுடியமா்வு உள்ளிட்ட மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக தமிழக தொழில் துறைச் செயலா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு!

மதுரையில் போதைத் தடுப்பு மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (52). போதைப் பழக்கத்துக்கு அடிமையான இவ... மேலும் பார்க்க

மகள் கொலை வழக்கு: தந்தைக்கு ஆயுள் சிறை

மகளை அடித்துக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருமங்கலம் வட்டம், வில்லூா் ஏ.ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

அழகா்கோயில் தெப்பத் திருவிழா: திரளானோா் தரிசனம்

மதுரை மாவட்டம், அழகா்கோவில் கள்ளழகா் கோயில் மாசி பௌா்ணமி தெப்பத் திருவிழா பொய்கரைப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரியாழ்வாா், ஆண்டாள் உள்பட 6 ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தக் கோயில்... மேலும் பார்க்க

வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி

வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி வருகிற மே 11-ஆம் தேதி முதல் இணைக்கப்படும். இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை-சென்னை-மதுரை வைகை... மேலும் பார்க்க

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத்தில் கொடியேற்றம்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய - இலங்கையின் பாரம்பரிய உறவு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா்... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரிய வழக்கு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

பெண்ணுக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவ... மேலும் பார்க்க