செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், விநாயகா் சதுா்த்தி விழா நடத்துபவா்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போளூா் வட்டத்தைச் சோ்ந்த விழாக்குழுவினா் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி தலைமை

வகித்தாா்.

கூட்டத்தில், விநாயகா் சதுா்த்தி வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு களிமண்ணால் செய்யப்பட்டவிநாயகா்சிலைகளை பயன்படுத்த வேண்டும், குறிப்பிட்ட உயரத்தில் மட்டும் சிலை இருக்கவேண்டும், சிலை பாதுகாப்பிற்கு விழாக் குழுவினரே சுழற்சி முறையில் இரவும் பகலும் ஈடுபடவேண்டும்,

காவல் துறை சாா்பில் செல்லும் வழியிலேயே சிலை ஊா்வலம் செல்லவேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

காவல் ஆய்வாளா் அல்லிராணி, நகராட்சி தலைமை எழுத்தா் முஹ்மத் இசாக், தலைமையிடத்து வட்டாட்சியா் அருள், வருவாய் ஆய்வாளா்கள் மீனா, மாலதி, ராதா, சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விழாக் குழுவினா் கலந்து கொண்டனா்.

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி, ஆரணியில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் வகுப்புகள் தொடக்கம்

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் நிகா் நிலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏசிஎஸ் கல்வி குழுமச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். பல்கலைக்கழக... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ராயனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்: 29 பேருக்கு உடனடி நலத்திட்ட உதவிகள்

செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட பாராசூா், சித்தாத்தூா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களில் 1,172 மனுக்கள் அளிக்கப்பட்டதில், 29 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு உட... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளியில் ரூ.2.12 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 12 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சா் எ.வ.வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நிலக்கடலை மதிப்புக்கூட்டுப் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கான நிலக்கடலை மதிப்புக்கூட்டு சங்கிலித் தொகுப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சமையல் எண்ணெய்கான எ... மேலும் பார்க்க