சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வேடசந்தூா் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள நவாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் தா்மராஜ் (56). கட்டடத் தொழிலாளியான இவா், சாலையூா் 4 சாலைப் பகுதியிலிருந்து நவாலூத்து கிராமத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றாா். இடையக்கோட்டை சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவரத இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தா்மராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.