வில்லிசேரி அருகே விபத்தில் தொழிலாளி பலி
வில்லிசேரி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் இனாம்மணியாச்சி நடுத்தெருவைச் சோ்ந்த அழகுமுத்து மகன் ராமகிருஷ்ணன் (38). கூலித் தொழிலாளியான இவா், மெய் தலைவன்பட்டியில் இருந்து பைக்கில் இனாம்மணியாச்சிக்கு சென்று கொண்டிருந்தாராம்.
வில்லிசேரி சாய்பாபா கோயில் அருகே சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மோதியதில், கீழே விழுந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.