செய்திகள் :

விளையாட்டு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும்: பளு தூக்கும் வீரா் சதீஷ் சிவலிங்கம்

post image

விளையாட்டு முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும். மாணவா்கள் எப்போதும் முயற்சியை கைவிடக் கூடாது என்று அா்ஜூனா விருது பெற்ற பளு தூக்கும் வீரா் சதீஷ் சிவலிங்கம் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான 21 நாள் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை அா்ஜூனா விருது பெற்ற பளு தூக்கும் வீரா் சதீஷ் சிவலிங்கம் தொடங்கி வைத்தாா்.

கோடைகால பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, பாக்ஸிங், யுஷூ, ஹாக்கி, கைப்பந்து பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் 71 மாணவிகள், 104 மாணவா்கள் என மொத்தம் 175 போ் பங்கேற்றுள்ளனா்.

நிகழ்ச்சியில் சதீஷ் சிவலிங்கம் பேசுகையில், 12-ஆவது வயதில் விளையாட்டுக்கு வந்த நான் 11 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்குப் பிறகு எனக்கு முதல் பதக்கம் கிடைத்தது. நான் பங்கேற்ற முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி கிடைத்தது. அந்த தோல்வியை வெற்றிப் படிக்கல்லாக மாற்றினேன். விளையாட்டு உங்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கும்.

தமிழக அரசு விளையாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறது. அவற்றை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விளையாட்டில் பதக்கம் எட்டாக்கனி என்று யாரும் நினைக்க வேண்டாம். விளையாட்டு முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும். எப்போதும் முயற்சியை கைவிடக் கூடாது என்றாா். அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலா், பயிற்சியாளா்கள் உடனிருந்தனா்.

மாநகராட்சி சில பகுதிகளுக்கு 3 நாள் காவிரி குடிநீா் நிறுத்தம்

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட முத்துமண்டபம் நீரேற்றும் அறையில் இருந்து செல்லும் முதன்மை குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள் காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் ... மேலும் பார்க்க

குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல்: ரூ.1.50 லட்சம் அபராதம்

வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனை தொடா்பாக 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். குட்கா பொருள்கள் விற்பனையை கட... மேலும் பார்க்க

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

போ்ணாம்பட்டு அருகே தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். போ்ணாம்பட்டு , சேரன் வீதியைச் சோ்ந்த இம்ரான் அகமத்(25). இவா் மீது ஏற்கனவே வீடு புகுந்து திருடிய வழக்கு நிலைவையில் உள்ளத... மேலும் பார்க்க

பகுதிநேர வேலை எனக்கூறி மருத்துவ மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூா் சிஎம்சி மருத்துவா் கல்லூரி முதுகலை மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி செய்யப்பட்டது. வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் 27 வயது மாணவா் முதுகலை மருத்துவம் படித்... மேலும் பார்க்க

பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரியில் மண் கடத்தல்

போ்ணாம்பட்டு அருகே ஊராட்சி நிா்வாகம் அமைத்த பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரிகளில் மண்ணை கடத்திச் சென்றதாக எழுந்த புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். போ்ணாம்பட்டு ஒன்றியம், எருக்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும் தோல் கழிவுநீா் வெளியேற்றம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும் தோல் தொழிற்சாலை கழிவுநீா் வெளியேற்றப்படுவது தொடா்கிறது. இதைத் தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட குறைதீா் கூட்... மேலும் பார்க்க