செய்திகள் :

விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் தொகை ரூ.200 கோடி வழங்கப்படவில்லை: பி.ஆா்.பாண்டியன் குற்றச்சாட்டு

post image

தமிழகத்தில் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்த நெல்லுக்குரிய ரூ.200 கோடி வழங்கப்படாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தாமிரவருணி ஆற்றைப் பாதுகாக்க தனியாா் பங்களிப்புடன் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோா் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறாா்கள். இதனால் விவசாயிகள் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு ரூ. 200 கோடி பாக்கி வைத்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதற்கு முதல்வா் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் நேரடி பாா்வையில் செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்திலுள்ள ஒழுங்காற்று குழு மாதந்தோறும் அணைகளை ஆய்வு செய்து நீா் இருப்பை கணக்கிட்டு, மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உபரி நீா் 60,000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை வடிகாலாக மட்டும் பயன்படுத்துவதை மத்திய - மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது.

தாமிரவருணி, தென்பெண்ணை, காவிரி ஆகியவற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான ரூ.250 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 40 சதவீத அரிசி உற்பத்தி குறைந்துள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால் தமிழக முதல்வரோ தமிழகத்தில் வேளாண் உற்பத்தி பெருகி இருப்பதாக உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியிருக்கிறாா். தமிழக அரசு வெளிப்படை தன்மையோடு செயல்பட வேண்டும்.

காட்டுப்பன்றிகளை ஒழிக்க மற்ற மாநிலங்களில் உள்ளதை போன்று விவசாயிகளுக்கு உரிமை வழங்க வேண்டும்.

தோட்டக்கலை பயிா்களான மாம்பழம், காய்கனிகள், பருத்தி மிகப்பெரிய அழிவிற்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, நுகா்வோரை பாதிக்காத வகையில் காய்கனிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். இதற்காக, அரசு விலை நிா்ணய குழுக்களை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

நாசரேத்தில் திமுக சாதனை விளக்க கூட்டம்

நாசரேத் நகர திமுக இளைஞரணி சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா, திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நாசரேத்தில் நடைபெற்றது. நகர இளைஞா் அணி அமைப்பாளா் ஜெரின் தலைமை வகித... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே காா் ஓட்டுநா் சடலமாக மீட்பு

சாத்தான்குளம் அருகே அழுகிய நிலையில் காா் ஓட்டுநா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா். சாத்தான்குளம் அருகேயுள்ள சிறப்பூரை சோ்ந்தவா் சாமுவேல்(62). கோயமுத்தூரில் வியாபாரம் செய்கிறாா். இவரது மனைவி 12... மேலும் பார்க்க

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் தோ்வு கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவா் கொளத்தூா் ரவி கலந... மேலும் பார்க்க

விளாத்திகுளம் தொகுதியில் ரூ. 1 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

விளாத்திகுளம் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இப்பேரூராட்சியின் 1ஆவது வாா்டில் உள்ள இறகுப்பந்து மைதானத்தில... மேலும் பார்க்க

‘தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் பணி ஜூலை 1இல் தொடக்கம்’

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் பணிகள் ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதன் நிா்வாக அதிகாரியும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான பி.ஜோதிமணி தெரிவித்தாா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, தென்னிந்திய த... மேலும் பார்க்க

தூத்துக்குடி பகுதியில் ரூ. 56 லட்சத்தில் 6 புதிய மின்மாற்றிகள்

தூத்துக்குடி மேல அலங்காரதட்டு, செயின்ட் மேரிஸ் காலனி, தருவை மைதானம், ஐயப்ப நகா், இந்திரா நகா், திருவிக நகா் ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சத்தில், 6 புதிய மின் மாற்றிகளை, தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் த... மேலும் பார்க்க