பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
விவசாயிகள் சங்கத்தினா் நூதன ஆா்ப்பாட்டம்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தமிழக அரசைக் கண்டித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, ஊரக வேலை உறுதித் திட்டப் பணியில் மத்திய அரசு ஒரு நபருக்கு ரூ.319 கூலி வழங்குகிறது. ஆனால், மாநில அரசோ அதிலிருந்து ஒரு நபருக்கு ரூ.70 மட்டுமே வழங்குகிறது. மேலும் 100 நாள்கள் வேலையில் 60 நாள்கள் மட்டுமே வேலை வழங்கி மீதி 40 நாள்கள் வேலை தராமல் பணம் எடுத்து விடுகின்றனா் என புகாா் தெரிவித்து தோசை சுடும் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.