Phoenix: "வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள" - மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் ...
விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய வேண்டுகோள்
பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள், பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மைத் துறை சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வறட்சி, புயல், மழை போன்ற எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்து கொள்வதற்கு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெறலாம். குறிப்பாக, 2025 -26-ஆம் ஆண்டு காரிப் பருவத்தில் சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 194 ஆக. 16-ஆம் தேதிக்குள் செலுத்தி பயன்பெறலாம்.
பூா்த்திசெய்த விண்ணப்பத்துடன் அடங்கல், நில உரிமை கணினி சிட்டா, ஆதாா் அட்டை நகல், நடப்பிலுள்ள வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்துடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்களுக்கு சென்று காப்பீட்டுத் தொகை ரூ. 194 செலுத்தி, இடா்பாடு ஏற்படும் காலத்தில் இழப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.