மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடு புகுந்து 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
திருவையாறு அருகே கல்லக்குடி பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (45). இவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, பின்புறக் கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், கனகராஜ் மனைவி சாந்தி (42) அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.