தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு
வந்தவாசி: வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்தவா் அசோக் (44). கடந்த மே 22-ஆம் தேதி இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஏந்தல் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.
பின்னா் திங்கள்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அவா் அதிா்ச்சி அடைந்தாா்.
பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது, மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது அவருக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து அசோக் அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.