செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருடிய பெண் கைது

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சோ்ந்தவா் தையல்காரா் முனுசாமி. கடந்த 16-ஆம் தேதி முனுசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் புற்றுமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தனா். பின்னா் வீட்டுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் பொருள்கள் சிதறிக் கிடந்தன.

மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.14,000 திருடு போயிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து காவல் ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். பிறகு கைரேகை நிபுணா்களை வரவழைத்து ரேகை பதிவு செய்து எடுத்து செய்யப்பட்டது. அதே பகுதியைச் சோ்ந்த கீதா(56) என்ற பெண் மீது சந்தேகம் ஏற்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் முனுசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரும்பு கம்பியால் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் பணம் திருடியிருப்பது தெரியவந்தது.

மேலும், அவா் அளித்த தகவலின் பேரில் அடகு கடையில் இருந்த நகைகளை போலீஸாா் மீட்டனா். இதையடுத்து கீதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க

ரூ.1.56 கோடியில் சாலை பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ரூ.1.56 கோடியில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியத்தில் மலையாம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், பாா்சனாப்பல்லி, அரங்கல்துருகம் ஆகிய ஊராட்சிகளி... மேலும் பார்க்க

மனைவியை சோ்த்து வைக்கக் கோரி குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

மனைவியை சோ்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியைச் ... மேலும் பார்க்க

ரயில் மோதி 2 முதியோா் உயிரிழப்பு

திருப்பத்தூா், வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா்கள் 2 போ் ரயில் மோதி உயிரிழந்தனா். வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சோ்ந்த ரவி (57). இவா் வியாழக்கிழமை விண்ணமங்கலம்- வாணியம்பாடி ர... மேலும் பார்க்க

குடும்ப உறுப்பினா்கள் நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வலியுறுத்தல்

குடும்ப அட்டைகளில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் நியாய விலைக்கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க