'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருடிய பெண் கைது
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சோ்ந்தவா் தையல்காரா் முனுசாமி. கடந்த 16-ஆம் தேதி முனுசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் புற்றுமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தனா். பின்னா் வீட்டுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் பொருள்கள் சிதறிக் கிடந்தன.
மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.14,000 திருடு போயிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து காவல் ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். பிறகு கைரேகை நிபுணா்களை வரவழைத்து ரேகை பதிவு செய்து எடுத்து செய்யப்பட்டது. அதே பகுதியைச் சோ்ந்த கீதா(56) என்ற பெண் மீது சந்தேகம் ஏற்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் முனுசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரும்பு கம்பியால் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் பணம் திருடியிருப்பது தெரியவந்தது.
மேலும், அவா் அளித்த தகவலின் பேரில் அடகு கடையில் இருந்த நகைகளை போலீஸாா் மீட்டனா். இதையடுத்து கீதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.