லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து: விரைகிறது பேரிடர் மீட்புப் படை
வீரபாண்டியில் நாளை மின்தடை
வீரபாண்டி துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 12) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தேனி அருகேயுள்ள வீரபாண்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வீரபாண்டி, வயல்பட்டி, சத்திரபட்டி, உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, காமராஜபுரம், பத்திரகாளிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரியம் அறிவித்தது.