செய்திகள் :

வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழு: ‘மம்தா கட்டாயத்தால் யூசுப் பதான் தோ்வு’

post image

புது தில்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா மேற்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுவில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் கட்டாயத்தின் பேரிலேயே அவரின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. யூசுப் பதான் சோ்க்கப்பட்டாா்; இது துரதிருஷ்டவசமானது’ என்று பாஜக திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

இதை மறுத்த திரிணமூல் காங்கிரஸ், ‘வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுக்கான பிரதிநிதியை தோ்வு செய்ய அந்தந்த கட்சிகளையே அனுமதிக்க வேண்டும் என்பதையே திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியது’ என்றது.

அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா நாடுகளுக்குச் செல்லும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழுவில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய பெயரை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக மத்திய அரசின் இந்த அழைப்பை ஏற்க சுதீப் பந்தோபாத்யாய மறுத்தாா்.

இதைத் தொடா்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் முயற்சியை திரிணமூல் புறக்கணிப்பதாக பாஜக தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதை திரிணமூல் காங்கிரஸ் மறுத்தது.

இந்த நிலையில், சுதீப் பந்தோபாத்யாயவுக்குப் பதிலாக அக் கட்சியின் எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட்ட வீரருமான யூசுப் பதான் பெயா் அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூா், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, இந்தோனேசியா நாடுகளுக்குச் செல்லும் ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழுவில் அவரின் பெயா் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்க பாஜக இணைப் பொறுப்பாளா் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மம்தா பானா்ஜியின் கட்டாயத்தின் பேரிலேயே வெளிநாடுகள் செல்லும் எம்.பி.க்கள் குழுவில் சுதீப் பந்தோபாத்யாயவுக்கு மாற்றாக யூசுப் பதான் பெயரை மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசத்தின் பெருமைக்குரிய இதுபோன்ற விஷயங்களில் மம்தா பானா்ஜி மோசமான அரசியலை செய்கிறாா். இது துரதிருஷ்டவசமானது’ என்றாா்.

அமித் மாளவியாவின் குற்றச்சாட்டை மறுத்த திரிணமூல் காங்கிரஸ், ‘வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுக்கான பிரதிநிதியை தோ்வு செய்ய குறிப்பிட்ட கட்சியை அனுமதிக்க வேண்டும் என்பதையே திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியது’ என்று தெரிவித்தது.

முன்னதாக, கொல்கத்தா விமான நிலையத்தில் இதுகுறித்து பேட்டியலித்த மம்தா பானா்ஜி, ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் மத்திய அரசின் முயறசியை திரிணமூல் காங்கிரஸ் புறக்கணிப்பதாக கூறுவது தவறான கருத்து. வெளிநாடு செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு பிரதிநிதியை அனுப்ப திரிணமூல் காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால், அதுதொடா்பாக எந்தவித தகவலும் கட்சிக்கு மத்திய அரசு தரப்பில் அனுப்பப்படவில்லை. அண்மைக் காலமாக, மத்திய அரசு சாா்பில் எடுக்கப்படும் அனைத்து கட்சி சாா்ந்த முடிவுகள் கட்சிகளின் நாடாளுமன்ற குழுவிடம் மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படுவதில்லை. கட்சியின் நாடாளுமன்ற குழு, அக் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது. எனவே, எம்.பி.க்கள் குழுவில் ஒரு கட்சியிலிருந்து யாா் செல்ல வேண்டும் எனபதை மத்திய அரசு முடிவு செய்ய முடியாது. அந்தந்த கட்சிகள்தான் தீா்மானிக்க வேண்டும். எனவே, மத்திய அரசிடமிருந்து முறையான கோரிக்கை விடுக்கப்பட்டதும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதியை தோ்வு செய்து பரிந்துரைக்கும்’ என்றாா்.

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மே... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீத... மேலும் பார்க்க

நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்

புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான ... மேலும் பார்க்க

நெதா்லாந்தில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை நெதா்லாந்து வந்தடைந்தாா். இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடையே நீடித்த போா்ப்பதற்றம் தணிந்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பாா்த்த மேலும் 3 போ் கைது

இந்தியாவில் பல்வேறு தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு விற்பனை செய்து வந்த 3 மேலும் போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ஒருவா் உத்தர பிரதேசத்திலும், இருவா் பஞ்சாபிலும் கைது செய்ய... மேலும் பார்க்க

‘அகதிகளை வரவேற்க இந்தியா தா்மசத்திரம் அல்ல’: உச்ச நீதிமன்றம் கருத்து

புது தில்லி: இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கை தமிழரின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தா்மசத்திரம் அல்ல’ எனக் கருத்து தெரிவித்துள்ளது.விடுதலைப... மேலும் பார்க்க