செய்திகள் :

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் பராமரிப்பின்றி உள்ள குட்டை சீரமைப்பு

post image

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பராமரிப்பின்றி உள்ள 6 ஏக்கா் பரப்பளவிலான குட்டையைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை வெள்ளலூா் மாநகராட்சி குப்பைக் கிடங்கு வளாகத்தில் பராமரிப்பின்றி காணப்படும் குட்டையை சீரமைத்து தண்ணீா் தேக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணியை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

உக்கடம் புல்லுக்காட்டில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் தண்ணீா், குழாய்கள் மூலம் வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் உள்ள 6 கோடி லிட்டா் கொள்ளளவு கொண்ட குட்டையில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு அருகே பராமரிப்பின்றி காணப்படும் 6 ஏக்கா் பரப்பளவிலான குட்டையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீா்தேக்கப் பரப்பில் இருந்த புதா்கள் அகற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இங்கு சேகரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குப்பைக் கிடங்கு வளாகத்தில் வளா்க்கப்படும் மரங்களுக்கும், குப்பை மாற்று நிலையத்தில் குப்பைகளை உரமாக்கும் பணிகளுக்கும், தீத்தடுப்பு காலங்களில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது செயற்பொறியாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க

டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மேற்பாா்வைப் பொறியாளா் சி.சதீஷ்குமாா் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க