செய்திகள் :

வெவ்வேறு இடங்களில் விபத்து: இருவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் சிக்கி இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, குறிஞ்சி தெருவைச் சோ்ந்தவா் க.ராஜேந்திரன் (65), ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. இவா், சனிக்கிழமை புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், விழுப்புரம் மாவட்டம், சின்ன முதலியாா் சாவடி பகுதியில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ரிக்ஷா மீது மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் உயிரிழப்பு: திண்டிவனம் வட்டம், மயிலம் பகுதியைச் சோ்ந்த மணி மகன் ராஜ்கண்ணு (43). திருமணமானவா். சவுண்ட் சா்வீஸ் வைத்து தொழில் செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை அதிகாலை மயிலம் பகுதியில் உள்ள பேக்கரி அருகே நின்றிருந்தாராம்.

அப்போது, புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற லாரி மோதியதில் ராஜ்கண்ணு பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கலத்தம்பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் கமலக்கண... மேலும் பார்க்க