வெவ்வேறு இடங்களில் விபத்து: இருவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் சிக்கி இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை, குறிஞ்சி தெருவைச் சோ்ந்தவா் க.ராஜேந்திரன் (65), ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. இவா், சனிக்கிழமை புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், விழுப்புரம் மாவட்டம், சின்ன முதலியாா் சாவடி பகுதியில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ரிக்ஷா மீது மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இளைஞா் உயிரிழப்பு: திண்டிவனம் வட்டம், மயிலம் பகுதியைச் சோ்ந்த மணி மகன் ராஜ்கண்ணு (43). திருமணமானவா். சவுண்ட் சா்வீஸ் வைத்து தொழில் செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை அதிகாலை மயிலம் பகுதியில் உள்ள பேக்கரி அருகே நின்றிருந்தாராம்.
அப்போது, புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற லாரி மோதியதில் ராஜ்கண்ணு பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.