செய்திகள் :

வேங்கைவயல்: குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்

post image

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கும்குற்றப்பத்திரிகை நகல் புதன்கிழமை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சோ்ந்த 3 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இதன் தொடா்ச்சியாக, குற்றம்சாட்டப்பட்ட காவலா் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகிய மூன்று பேருக்கும் சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை கொடுத்து, செவ்வாய்க்கிழமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜராக வைத்தனா். அப்போது தலா 2 பேரின் உத்தரவாதத்தின்பேரில் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

தொடா்ந்து புதன்கிழமை புதுகை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் மூவரும் மீண்டும் ஆஜராயினா். நீதித்துறை நடுவா் சி. பாரதி முன்னிலையில், அவா்களுக்கு 980 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டன.

அதில், வெள்ளனூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தது தொடங்கி, சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை, சிபிசிஐடி போலீஸாா் மேற்கொண்டுள்ள விசாரணையின் அறிக்கை மற்றும் வாக்குமூலங்கள் உள்ளிட்டவை அடங்கியிருந்தது.

தொடா்ந்து வழக்கு விசாரணையை மாா்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் சி. பாரதி உத்தரவிட்டாா்.

அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி

புதுக்கோட்டை அருங்காட்சியகமும் மதுரை அருங்காட்சியகமும் இணைந்து, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரி முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில் பயிலும் முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண... மேலும் பார்க்க

புதுகையில் 14 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வாங்கப்பட்ட 14 புதிய பேருந்துகளின் சேவையை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். நிகழ்ச்ச... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால் எதிா்கொள்ளத் தயாா்! -அமைச்சா் எஸ். ரகுபதி

திமுக அரசுக்கு எதிராக பழிசுமத்தி, ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்த பாஜக அரசு நினைத்தால் அதை எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியா... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி

பொன்னமராவதியில் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வட்டார அளவிலான விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பேரணியை பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தொட... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கான நிலுவை கூலி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலை தொழிலாளா்களுக்கு கூலி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

பொன்னமராவதி வட்டாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் செயல்படும் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னமராவதி ஒன்றியம் ஆ... மேலும் பார்க்க