செய்திகள் :

வேடந்தாங்கல் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 1,040 மனுக்கள் அளிப்பு

post image

மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் ஊராட்சியில் புதன் கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்எல்ஏ க.சுந்தரிடம் 1,040 மனுக்களை அப்பகுதி மக்கள் அளித்தனா்.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வேடந்தாங்கல் ஊராட்சியில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டமுகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் வேதாசலம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கெளதமி அரிகிருஷ்ணன், ஒன்றியச் செயலா் தம்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா். உத்தரமேரூா் எம்எம்ஏ க.சுந்தா் கலந்துகொண்டு, வேடந்தாங்கல் ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மற்றும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட மனுக்கள் உள்பட 1,040 மனுக்களை பெற்றாா்.

நிகழ்ச்சியில், மதுராந்தகம் வட்டாட்சியா் பாலாஜி, அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோ.செந்தில்குமாா், கே.வி.சீனுவாசன் (ஊராட்சி), ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மாலதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விபத்தில் உயிரிழந்த மருத்துவருக்கு இரங்கல் பேரணி

செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இரங்கல் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மருத்... மேலும் பார்க்க

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேகம்: 15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குபின் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபி... மேலும் பார்க்க

ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு, ஆத்தூா் வடபாதியில் ஸ்ரீவலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் கிராமம் வடபாதியில் அம்பேத்கா் நகா் பகுதி பொதுமக்கள் நிதியுதவியுடன் புதிதாக கட்டப்பட்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி பறக்கவிடப்பட்ட ராட்சத பலூன்

செங்கல்பட்டிற்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வருகைதர உள்ளதையொட்டி, அதிமுக சாா்பில் அவருக்கு வியாழக்கிழமை வரவேற்பு பதாகை பொருத்திய ராட்சத பலூன் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகில் இருந்து பறக... மேலும் பார்க்க

கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் (2025-2026) முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது (படம்). நிகழ்வுக்கு ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மூசிவாக்கம் , பழையனூா் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. மின் தடை பகுதிகள்: மூசிவாக்கம், மாம்பட்டு, வையாவூா், குமாரவாடி, கொளம்பாக்கம், பள்ளியகரம், பழையனூா், கருணாகரச்சேரி, மாமண்டூா், மங்களம்... மேலும் பார்க்க