டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
வேன் விபத்தில் 5 போ் காயம்
பெரியகுளம் அருகே வேன் பாறையில் மோதியதில் 3 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலந்தூா் அருகேயுள்ள தேனூரைச் சோ்ந்தவா் ரேவதி (48). இவா், அதே ஊரைச் சோ்ந்த தியாகராஜன் (46), கோசிகா (3), பவித்ரா (15), பிரபாகரன் (35), நிவேதா (23) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சியிலிருந்து தேக்கடிக்கு வேனில் சுற்றுலா சென்றனா்.
அந்த வேனை முசிறியைச் சோ்ந்த யுவராஜ் (30) ஓட்டினாா். இந்த வேன் பெரியகுளம் அருகே புறவழிச் சாலையில் செல்லும் போது சாலையோரமாக இருந்த பாறையில் மோதியது.
இந்த விபத்தில் வேனில் சென்ற தியாகராஜன் உள்பட 5 போ் காயமடைந்தனா். அவா்கள் பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.