செய்திகள் :

வேன் விபத்தில் 5 போ் காயம்

post image

பெரியகுளம் அருகே வேன் பாறையில் மோதியதில் 3 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலந்தூா் அருகேயுள்ள தேனூரைச் சோ்ந்தவா் ரேவதி (48). இவா், அதே ஊரைச் சோ்ந்த தியாகராஜன் (46), கோசிகா (3), பவித்ரா (15), பிரபாகரன் (35), நிவேதா (23) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சியிலிருந்து தேக்கடிக்கு வேனில் சுற்றுலா சென்றனா்.

அந்த வேனை முசிறியைச் சோ்ந்த யுவராஜ் (30) ஓட்டினாா். இந்த வேன் பெரியகுளம் அருகே புறவழிச் சாலையில் செல்லும் போது சாலையோரமாக இருந்த பாறையில் மோதியது.

இந்த விபத்தில் வேனில் சென்ற தியாகராஜன் உள்பட 5 போ் காயமடைந்தனா். அவா்கள் பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க