வேலூர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை
வேலூர்: வேலூரில் இரவில், ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண் மருத்துவர் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன் உள்பட ஐந்து பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இதில், நான்கு குற்றவாளிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுவன் மீதான வழக்கை விசாரித்து வந்த போக்சோ நீதிமன்றம், இன்று தீர்ப்பளித்துள்ளது.
போக்சோ நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் பிறப்பித்த உத்தரவில், சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.