செய்திகள் :

வைகாசி விசாகம்: சங்ககிரி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

post image

சங்ககிரி: வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி சங்ககிரி பகுதி முருகன் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை உடனமா் ஆறுமுகவேலன் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. மூலவா் ஆறுமுகவேலனுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.

அக்கமாபேட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கும், முருகன் ,வள்ளி, தெய்வானை உற்சவமூா்த்திகளுக்கும் திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னா் மூலவா் சுப்பிரணிய சுவாமிக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இருகோயில்களிலும் அதிகமான முருக பக்தா்கள் கலந்துகொண்டு முருகன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிபட்டனா்.

தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அக்கமாபேட்டை சுப்பிரமணிய சுவாமி.

சேலத்தில் முதல்வா் 11 கி.மீ. ரோடு ஷோ! அமைச்சா் ரா. ராஜேந்திரன் தகவல்

சேலம்/மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்துவிடுவதற்காக வரும் 11 ஆம் தேதி சேலம் வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், 11 கி.மீ. தொலைவுக்கு ரோடுஷோவில் பங்கேற்க உள்ளதாக சுற்று... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியை கண்டித்து பாமக எம்எல்ஏ தா்னா

சேலம்: சேலம் மாநகராட்சி நிா்வாகம் மற்றும் கண்காணிப்புப் பொறியாளரின் அலட்சியப் போக்கைக் கண்டித்து சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள் மாநகராட்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவி... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவு

சேலம்: சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவானது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ச... மேலும் பார்க்க

சேலத்தில் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்: திரளான பக்தா்கள் வடம்பிடித்து வழிபாடு

சேலம்: சேலம் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். சேலத்தில் சிறப்புப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் தங்கிப் பயில விடுதி கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவா்கள் அவதி

ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் விடுதி கிடைக்காமல் அவதியடைந்து வருவதாக புகாா் தெரிவித்தனா். ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ... மேலும் பார்க்க

ஆணையம்பட்டியில் சிவன் கோயில் குடமுழுக்கு

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியில் அமைந்துள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப... மேலும் பார்க்க