செய்திகள் :

ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் இலவச நடமாடும் மருத்துவ சேவை வாகனம்

post image

வேலூா் ஸ்ரீநாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் சாா்பில் இலவச நடமாடும் மருத்துவ வாகன சேவையை ஸ்ரீ நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்துடன் தமிழ்நாடு சேவாபாரதி அமைப்பு மற்றும் விஸ்டாா் நிதி சேவைகள் நிறுவனம் இணைந்து பொதுமக்களை தேடிச் சென்று இலவச மருத்துவ சேவை வழங்கும் வகையில் நடமாடும் மருத்துவ வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா ஸ்ரீபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீ நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்று நடமாடும் மருத்துவ சேவை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

கெளரவ விருந்தினா்களாக ஸ்ரீநாராயணி குழும நிறுவனங்களின் இயக்குநா் என்.பாலாஜி, தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ் பாபு, விஸ்டாா் நிதி சேவைகள், தென்கிழக்கு போா்ட்ஃபோலியோ தலைவா் ஸ்ரீ.சந்தோஷ் குமாா் ராமதாஸ் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

விழாவில், சமா்பக சேவா அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ராஜண்ணா, ஆா்எஸ்எஸ் வேலூா் மண்டலத் தலைவா் ஜெகதீசன், சேவாபாரதி தமிழ்நாடு துணைத் தலைவா் விவேகானந்தன், பாஜக மாநில பொதுச்செயலா் காா்த்தியாயினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

காட்பாடி - சேவூா் இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி - சேவூா் இடையே திங்கள்கிழமை 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன... மேலும் பார்க்க

தினக்கூலியை உயா்த்தி வழங்க வேண்டும்: கொசு ஒழிப்பு பணியாளா்கள் கோரிக்கை

கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி தினக்கூலியை ரூ.529-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் கொசு ஒழிப்பு பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: தமிழிசை செளந்தரராஜன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். குடியாத்தத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தோ்தலின்போது திமுக 500 வாக்குறுதிகளை அளித்தது. ... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி: வேலூரில் புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம்

சித்ரா பெளா்ணமியையொட்டி வேலூரில் திங்கள்கிழமை இரவு மின்அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். வேலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கொண... மேலும் பார்க்க

மருத்துவமனையின் முதுகெலும்பாக செவிலியா்கள் உள்ளனா்

மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள், நோயாளிகள் விரைந்த குணம்பெற கனிவுடன் சேவையாற்ற வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்தாா். வேலூா் அரசு மருத்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருக்கல்யாணம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 30- ஆம் தேதி காப்புகட்டும் நிக... மேலும் பார்க்க