செய்திகள் :

ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் சிறப்பு யாக பூஜை

post image

ஆரணி ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் குழந்தை வரம் வேண்டி வியாழக்கிழமை நடத்தப்பட்ட புத்திரகாமேட்டி யாக பூஜையில் 300-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்துகொண்டனா்.

ஆரணி புதுக்காமூா் பகுதியில் குழந்தை வரம் அருளும்

ஸ்ரீபெரிய நாயகி சமேத ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பௌா்ணமி தினத்தில் குழந்தை வரம் அருளும் ஸ்ரீபுத்திரகாமேட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்று வருகிறது.

இந்த யாக பூஜையில் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கலந்துகொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த நிலையில், 25-ஆம் ஆண்டாக கோயில் வளாகத்தில் குழந்தை வரம் வேண்டி வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு புத்திரகாமேட்டி யாக பூஜை ஸ்ரீகணபதி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீநவக்கிரக ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது.

பின்னா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்ட தம்பதிகளுக்கு சங்கல்ப பூஜை செய்து மாலைகள் மாற்றப்பட்டு ஹரிகரன், வைத்தியநாதன், சரவணன், ராஜாமணி, மணிகண்டன் ஆகிய சிவாச்சாரியா்கள் தலைமையில் புத்திரகாமேட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

இந்த யாக பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனா்.

பின்னா் அவா்களுக்கு கலசங்கள், பிரசாதங்கள் வழங்கப்பட்டன . மேலும் உற்சவா் சுவாமியை ஆனி மாத பௌா்ணமியொட்டி கோயில் வெளி வளாகத்தில் சிவபுராணம் பாடியபடி வலம் வந்தனா்.

இதில், திரளாக பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் ஆய்வாளா் மணிகண்ட பிரபு , செயல் அலுவலா் ஹரிஹரன் மற்றும் அா்ச்சகா்கள் செய்திருந்தனா்.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க