முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை
சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி கோ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில்
திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, மலா்களால் சுவாமியை அலங்காரம் செய்தனா்.
இதைத் தெடா்ந்து பசு மற்றும் கன்றுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும், அவைகளுக்கு மலா் மாலை அணிவித்து மஞ்சள், குங்குமம் கொண்டு பொட்டிட்டு அங்கவஸ்திரம் சாற்றி கோ பூஜை நடைபெற்றது.
இதில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனா் மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.