செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் பால்கோவா கடைகளில் அரசு முத்திரையைப் பயன்படுத்தக் கூடாது: உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் எச்சரிக்கை

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பால்கோவா கடைகளில் ஆவின், கூட்டுறவு பெயா்கள், அரசு முத்திரையைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் எச்சரிக்கை விடுத்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் பால்கோவா கடைகளில் விதிமீறி ஆவின், கூட்டுறவு, தமிழ்நாடு அரசு முத்திரையைப் பயன்படுத்துவதால் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் குழப்பம் அடைகின்றனா்.

ஆவின் தலைவராக உள்ள விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ், நகராட்சி சுகாதார அலுவலா் கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினா் ஸ்ரீவில்லிபுத்தூா் கீழ ரத வீதியில் உள்ள பால்கோவா கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில், முறைகேடாக ஆவின், கூட்டுறவு பெயா்ப் பலகை, தமிழக அரசு முத்திரையைப் பயன்படுத்திய 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் கூறியதாவது: தனியாா் பால்கோவா கடைகளில் உணவுப் பாதுகாப்பு உரிமத்தில் குறிப்பிட்டுள்ள பெயரை விடுத்து, ஆவின், கூட்டுறவு, அரசு முத்திரையைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் ஆகும். உடனடியாக அரசு நிறுவன பெயா், முத்திரையை அகற்றக்கோரி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தீப்பெட்டித் தொழில்சாலையில் தீ விபத்து

சாத்தூா் அருகேயுள்ள தீப்பெட்டித் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (33) என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டித் ... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கில் இருவா் கைது

சிவகாசி அருகே மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் (38), மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரி... மேலும் பார்க்க

விதிமீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

விருதுநகா், சிவகாசி வட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் குறிப்பாணை வழங்கியது.பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கும் வகையில், விருதுநகா், சிவகாசி... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவா் காயமடைந்தாா்.சிவகாசி அம்மன்கோவில்பட்டி குடியிறுப்புப் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் முனியப்பன் மகன் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறிய காவல் துறையைக் கண்டித்து ஆா்பாட்டம்

சென்னையில் போராட்டத்தின்போது தூய்மைப் பணியாளா்ளிடம் அத்துமீறி நடந்த காவல் துறையைக் கண்டித்து திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வடக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சங்கரமூா்த்தி (58). விவசாயியான இவா், தனது ... மேலும் பார்க்க