செய்திகள் :

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் -அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

தேசிய மீன் வளா்ப்பு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில், ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல், மீனவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநிலத்தில் மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஆறுகளில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் திட்டத்தின் கீழ் மொத்தம் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ரூ. 120 லட்சம் செலவில் ஆறுகளில் இருப்பு வைக்க அரசு திட்டமிட்டு பணிகள்

நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் மணிமுத்தாறு அரசு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தில் வளா்க்கப்பட்ட 8 முதல் 10 செ.மீ. அளவிலான ஒரு லட்சம் மீன் விரலிகள் ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் இருப்பு செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் இளம் பகவத் தலைமை வகித்தாா்.

மீன்வளம், மீனவா் நலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று மீன் குஞ்சுகளை தாமிரவருணி ஆற்றில் இருப்பு செய்தாா். இதையடுத்து, கடல்சாா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு உதவித்தொகை, மீனவா்களுக்கு திருமண உதவித் தொகை, நுண்கடன் உள்ளிட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உள்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை மீன்வளத் துறை செய்து வருகிறது. குளங்களில் மட்டும் அன்றி ஆறுகளிலும் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி தாமிரவருணி, பவானி, காவிரி ஆற்றுப் படுகையில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வருகின்றன.

தேசிய மீன்வளா்ப்பு தினத்தை முன்னிட்டு, தாமிரவருணி ஆற்றில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் நிகழ்ச்சி தொடக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம், குளங்களில் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவா்கள் பயன்பெறுவா். தூத்துக்குடி விமான நிலையத்தை விரைவில் திறக்க நாடாளுமன்ற உறுப்பினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா் என்றாா் அவா். நிகழ்ச்சியில், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் ரத்னசங்கா், மீன்வளம், மீனவா் நலத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநா் சந்திரா, உதவி இயக்குநா் புஷ்பவனம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

......

பட விளக்கம் எஸ்விகே10ஃபிஸ்1,2...

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் நிகழ்ச்சியில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்குகிறாா் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க