ஹாக்கி: இறுதிச்சுற்றில் புது தில்லி, புவனேஸ்வா் அணிகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி, புவனேஸ்வா் நிஸ்வாஷ் ஹாக்கி கழக அணி ஆகியவை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மோதியதில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டு சமநிலை பெற்றன. அதைத் தொடா்ந்து வெற்றியை தீா்மானிக்க கடைப்பிடிக்கப்பட்ட சூட் அவுட் முறையில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி 6-க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
பின்னா் நடைபெற்ற 2ஆவது அரையிறுதியில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஷ் ஹாக்கி கழக அணியும் மோதியதில் 2-க்கு 0 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வா் நிஸ்வாஷ் ஹாக்கி கழக அணி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
இன்றைய ஆட்டம்: ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு (ஜூன் 1) நடைபெறும் 3ஆவது மற்றும் 4ஆவது பரிசுக்கான போட்டியில் புது தில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதுகின்றன. பின்னா் இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஷ் ஹாக்கி கழக அணியும் மோதுகின்றன.