செய்திகள் :

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மால்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், ஹிமாசலின் மண்டி மாவட்டத்தின் நேர் சௌக்கில் உள்ள ஸ்ரீ லால்பகதூர் சாஸ்திரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவனை மற்றும் சம்பா மாவட்டத்தில் உள்ள பண்டித் ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவக் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

மண்டி தலைமையக டிஎஸ்பி தினேஷ் குமார் கூறுகையில், மருத்துவமனைகளில் முழுமையாக சோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவமனைகள் காலி செய்யப்பட்டு வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் மோப்ப நாய் படைகள் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிவளைத்தாக அதிகாரி கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மாநில செயலகம், உயர் நீதிமன்றம், டிசி மண்டி அலுவலகம் உள்பட மாநிலத்தின் பல முக்கிய அரசு நிறுவனங்களுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வந்தன. அவை அனைத்தும் புரளியேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Shri Lal Bahadur Shastri Medical College and Hospital on Ner Chowk of Mandi district and Pandit Jawahar Lal Nehru Government Medical College in Chamba district on Tuesday received bomb threats, police said.

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நமது சிறப்பு நிருபர்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு... மேலும் பார்க்க

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதி... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சா் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அ... மேலும் பார்க்க

தேசியவாதக் கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தான் வெற்றி பெற்றது தேசியவாதக் கொள்கையின் வெற்றி என சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்,‘குடியரசு துணைத் தோ்தல் கொள்க... மேலும் பார்க்க

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

‘ஆசியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்’ என்று சிங்கப்பூா்... மேலும் பார்க்க