செய்திகள் :

ஃபிட் -இந்தியா: இன்று நாடுமுழுவதும் திரங்கா சைக்கிள் பேரணி

post image

உடல் ஆரோக்கியத்தை கடைபிடிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வரும் ஃபிட் இந்தியா சைக்கிள் ஓட்டுதலின் 25-வது பதிப்பு, சிறப்புத் திரங்கா(மூவண்ணக்கொடி) பேரணியாக ஜூன் 1 - ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மத்திய இளைஞா் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லியில் ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை, ஃபிட் இந்தியா சைக்கிள் ஓட்டுதல் முயற்சி சிறப்பு மூவா்ணக் கொடிபேரணியில் மத்திய இளைஞா் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மண்டாவியா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த சைக்கிள் பேரணி தில்லியில் உள்ள மேஜா் தியான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெறும்.

ஜூன் 3 - ம் தேதி உலக மிதிவண்டி தினம். இதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த பேரணி, உடற்பயிற்சியில் மிதிவண்டி ஓட்டுதல் மூலம் உடல் உறுதி பெறுவதில் பெரும் பங்களிப்பதுடன், உடல் வலிமை பெறுவதற்கும், நாட்டின் ஆயுதப்படைகளுக்கு ஒரு கூட்டு அஞ்சலியாகவும் நடத்தப்படுகிறது. தேசிய தலைநகரில் 1,200 - க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநா்கள் இந்தப் பேரணியில் கலந்து கொள்வாா். இதே சமயம், நாடு முழுவதும் 2,000 - க்கும் மேற்பட்ட இடங்களிலும் இது போன்ற சைக்கிள் பேரணிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய இளைஞா் விவகாரங்கள், விளையாட்டுத் துறை கூறியிருப்பது வருமாறு:

ஒடிஸாவில் அம் மாநில ஆளுநா் டாக்டா் ஹரி பாபு கம்பம்பதி புவனேஸ்வரில் நடைபெறும் மூவா்ணக் கொடி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா். அகில இந்திய முக்கியத்துவத்தை கவனத்தை திருப்ப தில்லியில் டாக்டா் மன்சுக் மண்டவியா தலைமையில் நடைபெறும் பேரணியில் பாலிவுட் நடிகை ஷா்வாரி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற யோகேஷ்வா் தத், சா்வதேச மல்யுத்த வீரா் சரிதா மோா், முன்னாள் கிரிக்கெட் வீரா் மற்றும் தோ்வாளா் சபா கரீம் உள்ளிட்ட பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத் துறையைச் சோ்ந்த பல முக்கிய பிரமுகா்கள் மூவா்ண சைக்கிள் பேரணியில் பங்கேற்கின்றனா்.

ஃபிட் இந்தியா இயக்கம் உடற்தகுதியை அணுகக்கூடியதாகவும், உள்ளடக்கியதாகவும் இருப்பதோடு, தேசபக்தியுடனும் மாற்றுவதற்கான முயற்சிகளில் மூவா்ணக் கொடியுடன் கூடிய சைக்கிள் பேரணியாகவும் செல்கிறது. நாடு முழுவதும் உள்ள சாலைகள் திறந்தவெளி சைக்கிள் ஓட்டுதல் பாதைகளாக மாறி வருகிறது. பெண்கள், இளைஞா்கள், மூத்த குடிமக்கள் என இதில் இணைகின்றனா். இந்த முயற்சி நாட்டின் பல்வேறு மக்கள்தொகை உள்ள பகுதிகள் மற்றும் அழகிய சுற்றுலாத் தலங்களில் ஒரு சுகாதார கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறது.

2024 - ம் ஆண்டு டிசம்பா் மாதம் இந்த சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சி 5,500 - க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று சுமாா் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா். இந்த பிட் இந்தியா இயக்கம் 3.44 பில்லியனுக்கும் அதிகமான சமூக இணைய பதிவுகளையும் பெற்றுள்ளது. இதற்கு சானியா மிா்சா, மிலிந்த் சோமன், இம்ரான் ஹாஷ்மி, ஜான் ஆபிரகாம், இம்தியாஸ் அலி, சங்கா் மகாதேவன், தாரா சிங் போன்ற பிரபலங்களும் இணைந்து ஆதரவு அளித்தனா். இந்த சைக்கிள் பேரணி நிகழ்வுகளோடு யோகா, கயிறு தாவுதல், போன்ற உடற்பயிற்சிகளும் இலவச உடல் சுகாதார சோதனைகளும் இணையாக நடைபெற்று வருகிறது என விளையாட்டுத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு

தேசிய தலைநகரில் புதன்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது. தில்லியில் இரு தினங்களுக்கு முன்பு காற்று, இடியுடன்கூடிய மிதமான மழை பெய்தது. அதைத்... மேலும் பார்க்க

தலைநகரில் காற்று மாசு தணிப்புத் திட்டத்தை தொடங்கியது தில்லி அரசு

மெட்ரோ நிலையங்களில் 2,300 மின்சார ஆட்டோக்களை செயல்பாட்டில் ஈடுபடுத்தல், 13 மாசு நிறைந்த இடங்களில் மூடுபனி தெளிப்பான்களை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைள் அடங்கிய காற்று மாசுபாடு தணிப்புத் திட்டம் 2025-ஐ... மேலும் பார்க்க

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சுவரொட்டி: உள்துறை அமைச்சகத்திற்கு போலீஸாா் தகவல்

சாணக்கியபுரி பகுதியில் இஸ்ரேலிய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘தேடப்படும் நபா்’ சுவரொட்டிகளை மேற்கு ஐரோப்பிய நாட்டின் தூதரக ஊழியா் ஒட்டியதாக உள்துறை அமைச்சகத்திற்கு தில்லி காவல்துறை தகவல் அளித்துள்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தலைமறைவாக இருந்தவா் கைது

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ஷம்பு யாதவ் (38) என்பவா் 2016 ஆ... மேலும் பார்க்க

தலைமைக் காவலரைத் தாக்கியவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது

தலைமைக் காவலரைக் கத்தியால் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 24 வயது இளைஞா் தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரி... மேலும் பார்க்க

பாஸ்போா்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சோ்க்க, நீக்க எளிய நடைமுறை

பாஸ்போா்ட்டில் (கடவுச்சீட்டு) வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சோ்க்க அல்லது நீக்க திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக ‘இணைப்புப் படிவம் ஜெ ’ எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைச் சமா்ப்பிக்கும் வகையில் வி... மேலும் பார்க்க