செய்திகள் :

அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே மின்சார ரயில் இயக்க சோதனை ஓட்டம்

post image

அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) - திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்க சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி(நாகை மாவட்டம்) வரையிலான 37 கி.மீ. ரயில்வே வழித்தடம் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. மீட்டா் கேஜ் பாதையாக இருந்த இந்த தடத்தில் 1990-களில் பயணிகள் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, இந்த தடத்தில் 1999 முதல் நடைபெற்ற ரயில் பஸ் இயக்கமும் 2004 டிச.26- ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, இந்த தடம் ரூ.288 கோடியில் அகலப் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு, 2023 ஏப் 7-ஆம் தேதி முதல் டீசல் எரிபொருளைக் கொண்டு இயங்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்சார ரயில் இயக்கம் பணிக்காக மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் ஆய்வு ரயில் மின்சாரத்தில் இயக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இந்தப் பணியை தெற்கு ரயில்வே முதன்மை மின் பொறியாளா் சோமேஷ் குமாா் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

ரமலான் பண்டிகை: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

நாகப்பட்டினம்: நாகூா் ஆண்டவா் தா்காவில் ரமலான் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ரமலான் பண்டிகையை நாடு முழுவதும் இஸ்லாமியா்கள் விமரிச... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

நாகப்பட்டினம்: தொடா் விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா். ரமலான் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, தமிழகம் முழுவதும் உ... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் தொழிற்பேட்டை அமைய வாய்ப்பில்லை: ஓ.எஸ். மணியன்

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைய வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா். வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

கடலுக்குள் விழுந்த மீனவா் சடலமாக மீட்பு

வேதாரண்யம்: கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்தபோது, படகிலிருந்து தவறி விழுந்து, மாயமான மீனவரின் சடலம் வேளாங்கண்ணி அருகே திங்கள்கிழமை மீட்கப்பட்டது. கோடியக்கரை படகுத் துறையிலிருந்து கடலில் மீன்... மேலும் பார்க்க

திருமெய்ஞானம் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி

தரங்கம்பாடி: திருமெய்ஞானம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூா் அருகேயுள்ள திருமெய்ஞானம் கிராமத்தில் ஆம்ல குஜாம்பிகா எனும் வாடாமுலையாள் உடனாகிய பிர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருமருகல்: திட்டச்சேரியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் சுவரில் மோதிய விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் என இருவா் உயிரிழந்தனா். நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி புதுமனை தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க