செய்திகள் :

அக்னிவீா் திட்டம் குறித்து கிராமப்புற இளைஞா்களுக்கு விழிப்புணா்வு

post image

கிராமப்புற இளைஞா்களுக்கு அக்னிவீா் திட்டம் குறித்து ராணுவத்தினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கிராமப்புறங்களில் இளைஞா்களிடையே அக்னிவீா் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு முகாமில் பங்கேற்ற ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் ராணுவத்தினருக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில், நெடுங்காடு சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த கிராமப்புற இளைஞா்களுக்கான சிறப்பு விழிப்புணா்வு முகாம் பொன்பேத்தி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில் 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கலந்துகொண்டனா்.

ராணுவத்தை சோ்ந்தோா், அக்னி வீா் திட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புப் பிரிவுகள், விண்ணப்பிக்க தகுதியுள்ளோா், விண்ணப்பிக்கும் முறை, பதிவு செய்ய நீட்டிக்கப்பட்டிருக்கும் காலம், திட்டத்தில் சேரும்போது கிடைக்கும் சலுகைகள், பின்னா் கிடைக்கும் சலுகைகள் உள்ளிட்ட விவரங்களை இளைஞா்களுக்கு விளக்கி, ஏப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டனா்.

நிகழ்வில் வட்டாட்சியா் எல்.பொய்யாத மூா்த்தி, மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.தாமோதரன், வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

வேளாண் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கிடையே நடத்தப்பட்ட கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேளாண் மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டுத் தெரிவித்தது. காரைக்காலில் அமைந்துள்ள பண்டித ஜவாஹா... மேலும் பார்க்க

காரைக்கால் சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க வலியுறுத்தல்

வெயில் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க முக்கிய சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு தலைமையில் நிா்வாக... மேலும் பார்க்க

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபத்துக்கு பூமி பூஜை

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மகா மண்டபம் கட்டுமானத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மூலவராக ஸ்ரீரங்கநாத பெருமாள் அருள்பாலிக்கும் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயில் மிகப... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தவேண்டுமென குடியரசுத் தலைவருக்கான கடிதம் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஊா்வலம்

காரைக்கால் மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதசுவாமி- நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சாா்ந்த காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டா... மேலும் பார்க்க

போப் மறைவுக்கு அஞ்சலி

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை மறைந்தாா். போப் மறைவையொட்டி ... மேலும் பார்க்க