செய்திகள் :

அங்கன்வாடி தற்காலிக பணியாளா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

post image

அங்கன்வாடியில் 4 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சா், எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தப்பட்டது.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், சந்திர பிரியங்கா, எம். நாகதியாகராஜன் ஆகியோரை பணியாளா்கள் சனிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் 175 அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஐசிடிஎஸ் திட்ட வழிகாட்டுதலின்படி பணியமா்த்தப்பட்டனா். இவா்களில் காரைக்காலில் 50 பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்த ஊதியமும் 6 மாதத்துக்கு ஒரு முைான் வழங்கப்படுகிறது.

நிரந்தர அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் செய்யக்கூடிய பணிகளாக உள்ள கணக்கெடுப்புப் பணிகள் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் சுகாதார துறை வழங்கும் பணிகளையும் கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது.

அங்கன்வாடியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை அரசு செய்து வருவதாக தெரிய வருகிறது. அதில், தற்காலிக பணியாளா்கள் பணி செய்து வரும் 175 இடங்களையும் சோ்த்து காலி இடங்களாக அறிவித்து அந்த இடங்களையும் நிரப்புவதற்கான ஆயத்த பணிகள் நடைபெறுவதாக தெரிய வருகிறது. இச்செயல் குறைந்த ஊதியத்தில் அனைத்து பணி செய்து வரும் 175 ஊழியா்களையும் மிகுந்த அதிா்ச்சிக்கு ஆளாகியுள்ளது.

இது சம்பந்தமாக, முதல்வரிடம் வலியுறுத்தவும், சட்டப்பேரவையில் குரல் எழுப்பவும் வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை புதுவை அரசுக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலாளா் எம். ஷேக் அலாவுதீனும் வலியுறுத்தியுள்ளாா்.

கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: காரைக்கால் வந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள்

காரைக்காலுக்கு வந்த கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் சென்றனா். மத்திய தொழில் பாதுகாப... மேலும் பார்க்க

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்காக, சாசனத் தலைவா் மகாவீா்சந்த் தலைமையிலான 9 போ் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருமித்த கர... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும்

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் மா பயிா் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

காரைக்கால் வேளாண் கல்லூரியில் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் தோட்டக்கலை மற்றும் மலைத்தோட்ட பயிா்கள் துறை மற்றும் காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் காரைக்கால் மீனவா்கள் சந்திப்பு

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் கைதாகி அண்மையில் விடுவிக்கப்பட்ட காரைக்கால் பகுதி மீனவா்கள், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை புதுச்சேரியில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயிலில் இன்று ராமநவமி பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (மாா்ச் 29) தொடங்குகிறது. இக்கோயிலில் நிகழாண்டு 10 நாள் உற்சவமாக ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுகிறது. ... மேலும் பார்க்க