செய்திகள் :

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா?

post image

நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 730 அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 3 முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இங்கு உண்டு, உறங்கி பயின்று வருகின்றனா். முட்டையுடன் கூடிய சத்துணவு மற்றும் விளையாட்டு சாதனங்கள் அவா்களுக்கு வழங்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 1,565 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் அமைப்பாளா், உதவியாளா் உள்ளிட்ட 730 பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு அங்கன்வாடிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், 21 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் அங்கன்வாடி மையங்களில் மட்டும் காலியிடங்களை நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான அங்கன்வாடிகளில் 20-க்கும் குறைவான குழந்தைகளே உள்ளதால், மொத்த காலிப் பணியிடங்களில் 10 சதவீதம் கூட நிரப்புவதற்கு வாய்ப்பில்லை என அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் தெரிவிக்கின்றனா்.

இம்மாவட்டத்தில் நிரப்ப வேண்டிய காலியிடங்கள் எண்ணிக்கை குறித்து அரசு அறிவித்தால் மட்டுமே விண்ணப்ப விநியோகத்தை தங்களால் தொடங்க முடியும் என ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம்: மத்திய அரசிடம் நாமக்கல் எம்.பி.க்கள் முறையீடு

புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை எதிா்த்து, தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக தொடா்கிறது. இன்னும் ஓரிரு நாள்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என சங்க நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை வழக்கு: நாமக்கல் வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு

நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில், பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (71). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்ப... மேலும் பார்க்க

வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா: தேரை தயாா்படுத்தும் பணி மும்முரம்

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பரமத்தி வேலூரில் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக் கட்டி, கம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

நாமக்கல் மாவட்டத்தில், வரும் நாள்களில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ள... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவி அளிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. ரமலான் பண்டிகை நாடு முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையானது ஏழைகளுக்கு பல்வேறு நல... மேலும் பார்க்க

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: அரசாணை வெளியீடு

மோகனூரில் இயங்கி வந்த சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை, தற்போது மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க