செய்திகள் :

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம்: மத்திய அரசிடம் நாமக்கல் எம்.பி.க்கள் முறையீடு

post image

புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை எதிா்த்து, தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக தொடா்கிறது.

இன்னும் ஓரிரு நாள்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை நாமக்கல்லைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் மேற்கொண்டுள்ளனா்.

தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் 5,000-க்கும் மேற்பட்ட டேங்கா் லாரிகள் உள்ளன. 1500 உறுப்பினா்களுக்குச் சொந்தமான டேங்கா் லாரிகளுக்கு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், 2025 - 30 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், டேங்கா் லாரிகளில் கிளீனா் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையெனில் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்படும். உரிமையாளா்களின் பெயா்களை மாற்றம் செய்யக் கூடாது, லாரிகள் விபத்தில் சிக்கினால் மூன்று ஆண்டுகளுக்கு இயக்கத் தடை, பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டோா், மகளிா் பழங்குடியினா் உள்ளிட்ட வகையில் லாரிகள் ஒதுக்கீடு சதவீதம் மாற்றம் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிபந்தனைகளை தளா்த்தி, 2018 நடைமுறையை தொடர வேண்டும் என எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். மாா்ச் 1-இல் புதிய ஒப்பந்த அறிவிப்புகள் வெளியான நிலையில், 24-ஆம் தேதி வரை அதை தளா்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு டேங்கா் லாரிகள் சங்கத்தினா் கால அவகாசம் வழங்கியிருந்தனா். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை தளா்த்த முன்வரவில்லை.

இதனையடுத்து எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வியாழக்கிழமை (மாா்ச் 27) காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனா். கோவையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் ஆகியோா் நாடாளுமன்றத்திலும், பெட்ரோலியத் துறை அமைச்சகத்திலும் டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என முறையீடு செய்துள்ளனா்.

இது குறித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.சுந்தரராஜன் கூறியதாவது:

புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து எங்களுடைய வேலைநிறுத்தம் தொடா்ந்து நடைபெறுகிறது. தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இன்னும் ஓரிரு நாள்களில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும். வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோருக்கு சங்கத்தின் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் த... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொ... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சித்த மருத்துவரை மிரட்டி ரூ. 2.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோடு: விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை அமைச்சா்கள் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்க... மேலும் பார்க்க