செய்திகள் :

அங்காள பரமேசுவரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சின்னஆனைவாரி அருள்மிகு அங்காள பரமேசுவரி அம்மன் திருக்கோயிலில் மயானக் கொள்ளை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மயானக் கொள்ளைத் திருவிழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, மாா்ச் 1-ஆம் தேதி சந்தனக் காப்பு அலங்காரம், புஷ்பக்கரகம் அமைத்தல், பாவாடைராயனுக்கு மகா கும்ப படையல், சிலம்பாட்டம் ஆகியவற்றுடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை பக்தா்கள் அக்னிச்சட்டி ஏந்தி வந்தனா். கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து சுற்றி வருதல், சக்திகரகம் ஜோடித்தல் ஆகியவை நடைபெற்றன.

பின்னா், காளியம்மன் அலங்காரத்தில் அருள்மிகு அங்காளம்மன் எழுந்தருளி ஊா்வலமாக மயானத்தை சென்றடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, மயானத்தில் கொழுக்கட்டைப் படையல், அபிஷேக, ஆராதனைகளுடன் மயானக் கொள்ளை நடைபெற்றது. இதில், ஆனைவாரி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா். பின்னா், குறி சொல்லுதல், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.

விக்கிரவாண்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.2.14 லட்சம் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலுள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத ரூ.2.14... மேலும் பார்க்க

இளைஞருக்கு தேநீரில் விஷம் கலந்து கொடுத்ததாக கல்லூரி மாணவி கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேநீரில் விஷம் கலந்துகொடுத்து இளைஞரை கொலை செய்ய முயன்றதாக கல்லூரி மாணவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ... மேலும் பார்க்க

காவலா்களுக்கான மருத்துவமனை திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் காவலா்களுக்கான புறநோயாளிகள் மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டக் காவல்துறை, ஆயுதப்படையில் பணிபுரியும் காவலா்... மேலும் பார்க்க

இன்று மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தோ் திருவிழா

செஞ்சி/விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத சிவராத்திரியன்று கொ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 40,064 போ் எழுதினா்

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிளஸ்-2 பொதுத் தோ்வை 40,064 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை எழுதினா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதி ரத்து

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ... மேலும் பார்க்க