செய்திகள் :

`அசத்திய பவுலர்கள்' சேப்பாக் சூப்பர் கில்லீஸை சுருட்டிய இறுதிப் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி

post image

திண்டுக்கல் நத்தத்தில் டிஎன்பிஎல் குவாலிபையர் -1 ஆட்டம் நேற்று நடைபெற்றது. அட்டவணையில் முதல் இரண்டு இடத்தில் இருந்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அமித் சாத்விக் அதிரடியாக ஆடி 40 பந்துகளில் 57 ரன்களும், துஷார் ரஹேஜா 13 பந்துகளில் 28 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

களமிறங்கிய கேப்டன்:

சாய் கிஷோர் பொறுப்புடன் ஆடி 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதிரடி மன்னன் சசிதேவ் 26 பந்துகளில் 57 ரன்கள் குவிக்கவே அணியின் ஸ்கோர் மளமளவென ஏறத் தொடங்கியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக லோகேஷ் ராஜ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

20 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடக்கம் முதலே விக்கெட்டுகளைப் பறி கொடுத்தனர். அணியின் கேப்டன் அபராஜித் அடித்த 30 ரன்கள் தான் அதிகபட்ச ரன்கள். 6 வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் வெளியேறினர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16.1 ஓவர்களில் 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்து தோல்வியைத் தழுவியது.

ஐ ட்ரீம் திருப்பூர் தமிழனஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் இசக்கி முத்து, மதிவாணன் இருவரும் நான்கு ஓவர்களை வீசி தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளும், சிலம்பரசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். நடப்பு 2025 சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பவர்பிளேயில் அதிகபட்சமாக 70 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளது. இதற்கு முன் அதிகபட்சமாக 60 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தது.

திருப்பூர் தமிழன்ஸ் அணி தமிழ்நாடு பிரீமியர் லீக் வரலாற்றில் தங்களது சிறந்த மொத்த ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டில் 201 ரன்களும், 2024 ஆம் ஆண்டில் 200 ரன்களும் எடுத்ததே அவர்களின் சிறந்த ஸ்கோராக இருந்தது.

இந்த வெற்றி மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றது திருப்பூர் தமிழன்ஸ் அணி. தோற்ற அணியான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் குவாலிபயர் - 2 ல் வெற்றி பெறும் அணியுடன் மோதும் அதில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு செல்லும்.

ENGvsIND: 'பும்ரா எங்க? சாய் சுதர்சன் எங்க?' - அணித்தேர்வை வெளுத்து வாங்கிய ரவி சாஸ்திரி

'பிளேயிங் லெவன் மாற்றஙகள்!'இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனில் இந்திய அணி நிறைய மாற்றங்கள... மேலும் பார்க்க

``முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்'' - ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹானுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம... மேலும் பார்க்க

CSK : 'சென்னை அணியில் சஞ்சு சாம்சனா?' - ஐ.பி.எல் இன் டிரேட் விதிகள் சொல்வதென்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் தங்கள் அணிக்கு வாங்கவிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. சென்னை அணியால் சாம்சனை வாங... மேலும் பார்க்க

`அஜித்குமாரை கடுமையாகத் தாக்கிய தனிப்படை போலீஸ்' - வெளியான அதிர்ச்சி வீடியோ; வலுக்கும் கண்டனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோயிலுக்கு வந்த மருத்துவர் நிகிதா என்பவர் தனது காரில் இருந்த நகை காணாமல் போனதாக போலீஸில் அளித்த புகாரில், கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார... மேலும் பார்க்க

'Captain Cool' என்ற பெயரை வர்த்தக முத்திரையாக பதிவு செய்த தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரசிகர்கள் அவரது தலைமைத்துவத்தை மெச்சி அழைக்கும் 'கேப்டன் கூல் (Captain Cool)' என்ற பெயரை வர்த்தக முத்திரையாக (ட்ரேட் மார்க்) பதிவு செய்து... மேலும் பார்க்க

Rishabh Pant: "விபத்துக்குப் பின் கண்விழித்ததும் பண்ட் முதலில் கேட்டது..!" - பகிரும் மருத்துவர்

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கடந்த 2022 டிசம்பரில் டெல்லியிலிருந்து தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்துக்குள்ளானார்.அதிர... மேலும் பார்க்க