செய்திகள் :

அஜித்குமார் வழக்கு : `சாப்பிட முடியல, கடைக்குகூட போக முடியவில்லை’ - புகார் கொடுத்த நிகிதா

post image

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகிய இருவரிடமும் இரண்டாவது முறையாக சிபிஐ விசாரணை நடத்தியது.

அஜித்குமார் கொலை வழக்கு

சிபிஐ விசாரணை

மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. கடந்த ஜூன் 27 -ம் தேதியன்று நிகிதா அவரது தாயாருடன் எங்கெங்கு சென்றார்? மருத்துவமனைக்கு சென்றார்களா? நகையை எந்த இடத்தில் கழற்றினார்கள்? என்னென்ன வகையிலான நகைகள், நகைக்கான ரசீது, நகை காருக்குள் வைக்கப்பட்ட இடம்? அஜித்குமாரிடம் பேசியது குறித்தும்,

ஜூன் 27 ஆம் தேதி காலையில் கோயிலில் நடைபெற்ற சம்பவம், மாலையில் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அஜித்குமாரை அழைத்து சென்றபோது நடந்த சம்பவம் குறித்தும், இரவில் திருப்புவனம் காவல்நிலையத்திலிருந்து வீடியோ எடுத்தது குறித்தும், நிகிதாவிற்கு வந்த செல்போன் அழைப்புகள் குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

தாயாருடன் நிகிதா

இதற்குமேல் அழுவதற்கு கண்ணீர் இல்லை

6 மணி நேரம் விசாரணை முடிந்து புறப்பட்ட நிகிதா, செய்தியாளர்களிடம் பேசும்போது, "என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். நடந்த உண்மைகளை சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளேன், அவர்கள் மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு வருவேன்.

நான் வெறும் புகார் மட்டுமே கொடுத்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என தெரியாது. அஜித்குமார் இறந்தற்கு நான் வருத்தப்படுகிறேன், நான் தினந்தோறும் அழுதுகொண்டே உள்ளேன். சிபிஐ-யிடம் எல்லாமே சொல்லிவிட்டேன். இதற்குமேல் அழுவதற்கு கண்ணீர் இல்லை. வேதனையாக உள்ளது.

வேண்டும் என்றே சாகவேண்டும் என்று நினைப்போமா? நானும் வேதனையில் தான் உள்ளேன், சாப்பிட முடியவில்லை. காய்கறி வாங்க, பெட்ரோல் போட போக முடியவில்லை. கல்லூரி செல்ல முடியவில்லை, ஒருபுறம் மட்டுமே பேசுகிறார்கள். மறுபுறம் பற்றி பேசாதது வருத்தமாக உள்ளது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நீலகிரி: பழங்குடி மாணவருக்கு ராகிங் தொல்லை, 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்டு - என்ன நடக்கிறது?

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள பைக்காரா பகுதியைச் சேர்ந்த தோடர் பழங்குடியின இளைஞர் ஒருவர் கூடலூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். புதிதாகக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் இந... மேலும் பார்க்க

உடுமலைப்பேட்டை: விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு; வனத்துறை சித்ரவதையா? - மலைவாழ் மக்கள் சொல்வதென்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர் மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கஞ்சா க... மேலும் பார்க்க

"நானும் கவினும் உண்மையா காதலிச்சோம்; தவறா பேசாதீங்க" - நடந்ததை விவரிக்கும் கவின் காதலி

திருநெல்வேலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் என்பவரை, காவல்துறை அதிகாரிகளான சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனும். கவினின் காதலியின் சகோதரருமான சுர்ஜித் ஜூலை 27-ம் தேதி கொடூரமாக ஆணவக்கொலை செய்த ... மேலும் பார்க்க

`நெல்லை கவின் ஆணவக்கொலை' - எவிடென்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை சொல்வதென்ன?

"நான்கு வெட்டுகளிலேயே கவினுக்கு உயிர் போயிருக்கிறது, கூலிப்படையினரைப்போல அவனது அரிவாள் வெட்டு இருந்திருக்கிறது. அப்படியென்றால் இது திட்டமிடப்பட்ட கூட்டாக சதி செய்த படுகொலையாகவே தெரிகிறது." என்று எவிடெ... மேலும் பார்க்க

தலைக்கேறிய மது போதை; இளைஞரைக் கொன்று எரித்த நண்பர்கள்... கோவையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சுரேஷ்குமார் (28). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்களான ரகுபதி (24), முத... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அடையாளம் கண்ட போலீஸ்!

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரோஸி (40) இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று மாலை வீட்டுக்குச் செல்ல பெருங்குடி ரயில் நிலையத்தில் க... மேலும் பார்க்க