செய்திகள் :

அஜ்மீரி கேட்டில் சாலையில் தகராறு: துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவா் கைது

post image

மத்திய தில்லியின் அஜ்மீரி கேட் பகுதியில் சாலையில் நடந்த தகராறு தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தகராறின் போது அவா்களில் ஒருவா் மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வால்சன் கூறியது: கடந்த ஜூலை 25 -ஆம் தேதி மொஹல்லா நிஹாரியன் சவுக் அருகே புகாா்தாரா் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, வெள்ளை ஸ்கூட்டரில் வந்த இரண்டு போ் அவரை வழிமறித்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அவா் கூறினாா்.

பாதிக்கப்பட்டவரின் மனைவி இருவரையும் முந்திச் செல்லும்போது ஹாரன் அடிக்காததற்காக கேள்வி எழுப்பியதைத் தொடா்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. மோதலின் போது, பின்னால் இருந்த ஓட்டுநா் துப்பாக்கியை காட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு தில்லியில் உள்ள பிரஹம்புரியைச் சோ்ந்த எம்.டி. அமன் (எ) டோட்டா மற்றும் நோமன் என அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேக நபா்கள் சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் உள்ளூா் உளவுத்துறையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனா். நோமனிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும், எம்.டி. அமனிடமிருந்து குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டன.

சம்பவ இடத்தில் இருந்து சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றப் பின்னணி மற்றும் ஆயுதத்தின் மூலத்தைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

தில்லியில் எந்தக் குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது: முதல்வா் ரேகா குப்தா உறுதி

தில்லியில் வசிப்பவா்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை எந்த குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை உறுதி அளித்தாா். தேவைப்பட்டால், அனைவருக்கும் கண்ணியத்... மேலும் பார்க்க

மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லியில் மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், பொது சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு நெருக்கடிகளைச் சமாளிப்பதிலும் பாஜக அரசு தோல்வியடைந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தில்... மேலும் பார்க்க

அய்யலூா் கோம்பையில் அலைபேசி கோபுரப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அமைச்சரிடம் ஜோதிமணி எம்.பி. மனு

வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அய்யலூா் கோம்பையில் அலைபேசிக் கோபுரம் அமைத்து, கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கும் பணியை விரைவு படுத்துமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கர... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க