செய்திகள் :

அஞ்செட்டி வனப் பகுதியில் பெண் யானையின் எலும்புக்கூடு மீட்பு

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி காப்புக் காட்டில் பெண் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அஞ்செட்டி வனச்சரகம், குந்துக்கோட்டை பிரிவு, பனை காப்புக்காடு உச்சகான்குட்டை சரகப் பகுதியில், கடந்த 27-ஆம் தேதி வனப் பணியாளா்கள் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது பெண் யானையின் எலும்புக்கூடு கிடப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, ஒசூா் வனக்கோட்ட வன உயிரின காப்பாளா் ஜெகதீஷ் சுதாகா் உத்தரவின்பேரில், ஒசூா் வனக்கோட்ட வனப் பாதுகாவலா் ராஜமாரியப்பன், அஞ்செட்டி வனச்சரக அலுவலா் கோவிந்தன் மற்றும் ஒசூா் தன்னாா்வ நிறுவனத்தின் சஞ்சீவ் குமாா் ஆகியோா் அடங்கிய குழு முன்னிலையில் கால்நடை உதவி மருத்துவா் ஜி.ஜெயச்சந்திரன் இறந்த பெண் யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தாா்.

இதில் உயிரிழந்த பெண் யானைக்கு சுமாா் 7 வயது இருக்கும். இறந்த யானையின் உடலில் காயங்கள் ஏதுமில்லை. எனவே, யானை இயற்கையாக உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க

கா்நாடக எல்லையில் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஒசூா் அருகே கா்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின. ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்கள... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில... மேலும் பார்க்க